ஆப்நகரம்

அம்பானியால் நெருக்கடி.. சிக்கிக்கொண்ட ஃபியூச்சர்.. மல்லுக்கட்டும் வங்கிகள்!

ஃபியூச்சர் நிறுவனத்திடம் இருந்து கடன்களை மீட்பதற்கான நடவடிக்கையில் வங்கிகள் ஈடுபட்டுள்ளன.

Samayam Tamil 22 Mar 2022, 5:13 pm
ஃபியூச்சர் ரீட்டெய்ல் (Future Retail) நிறுவனம் விவகாரத்தில் அமேசான் நிறுவனத்துக்கும், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் இடையே உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போர் நடந்து வருகிறது. இந்நிலையில், ஃபியூச்சர் ரீட்டெய்ல் நிறுவனத்தின் ஸ்டோர்களை ரிலையன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
Samayam Tamil Future Retail


ஃபியூச்சர் ரீட்டெய்ல் நிறுவனமோ அதிக கடன் சுமையிலும், நிதி நெருக்கடியிலும் சிக்கிக்கொண்டுள்ளது. இதனால், ஃபியூச்சர் ரீட்டெய்ல் நிறுவனத்திடம் இருந்து கடன்களை மீட்பதற்கான பணியை வங்கிகள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஃபியூச்சர் ரீட்டெய்ல் நிறுவனம் கடும் சுமையில் இருப்பதால் தனது சொத்துகளை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் விற்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், சில ஒப்பந்தங்கள் மீறப்பட்டுள்ளதால் ஃபியூச்சர் ரீட்டெய்ல் சொத்துகளை ரிலையன்ஸுக்கு விற்க தடை கோரி அமேசான் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதற்கிடையே ஃபியூச்சர் நிறுவனத்துக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான ஸ்டோர்களை ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த மாதம் கைப்பற்றியது. ஃபியூச்சர் நிறுவனம் வாடகை செலுத்தாததால் ஸ்டோர்களை கைப்பற்றியதாக ரிலையன்ஸ் காரணம் தெரிவித்தது.

இதையடுத்து, ஃபியூச்சர் நிறுவனத்திடம் இருந்து கடன் தொகையை மீட்பதற்கான நடவடிக்கையை பேங்க் ஆஃப் பரோடா வங்கி தொடங்கியுள்ளது. இதற்காக கடன் மீட்பு தீர்ப்பாயத்திடம் இந்த வாரமே ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேங்க் ஆஃப் பரோடா வங்கியை தொடர்ந்து அடுத்தடுத்து மற்ற வங்கிகளும் ஆவணம் தாக்கல் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது. ஃபியூச்சர் ரீட்டெய்ல் நிறுவனத்துக்கு சுமார் 400 கோடி டாலர் கடன் சுமை உள்ளது. முதற்கட்டமாக ஃபியூச்சர் நிறுவனத்தின் சொத்துகளை விற்று பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறுகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்