பல்வேறு பண்டிகைகள் காரணமாக, வரும் வியாழக்கிழமை தொடங்கி, 4 நாட்கள் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வருகிற 24ம் தேதியான வியாழக்கிழமை நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதைத்தொடர்ந்து, 25ம் தேதி புனித வெள்ளி வருகிறது. மார்ச் மாதத்தின் 4வது வாரம் என்பதால், 26ம் தேதியான சனிக்கிழமை, வங்கிகளுக்கு விடுமுறையாகும். மேலும், ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல, வார விடுமுறை.
இதை முன்னிட்டு, வங்கிப் பணிகளை முன்கூட்டியே நிறைவுசெய்துகொள்ளும்படி, வாடிக்கையாளர்களை அறிவுறுத்தி உள்ளதாக, வங்கி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும், தொடர் விடுமுறை நாட்களில், வாடிக்கையாளர்களின் வசதிக்காக, ஆன்லைன் வங்கிச் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வருகிற 24ம் தேதியான வியாழக்கிழமை நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதைத்தொடர்ந்து, 25ம் தேதி புனித வெள்ளி வருகிறது. மார்ச் மாதத்தின் 4வது வாரம் என்பதால், 26ம் தேதியான சனிக்கிழமை, வங்கிகளுக்கு விடுமுறையாகும். மேலும், ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல, வார விடுமுறை.
இதை முன்னிட்டு, வங்கிப் பணிகளை முன்கூட்டியே நிறைவுசெய்துகொள்ளும்படி, வாடிக்கையாளர்களை அறிவுறுத்தி உள்ளதாக, வங்கி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும், தொடர் விடுமுறை நாட்களில், வாடிக்கையாளர்களின் வசதிக்காக, ஆன்லைன் வங்கிச் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.