ஆப்நகரம்

அது என்ன கிசான் விகாஸ் பத்ரா? இதுல பணம் போட்டால் லட்சாதிபதி ஆகலாம்!

கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தின் நன்மைகள் மற்றும் அதில் எவ்வாறு இணைந்து பயன்பெறுவது என்பது பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

Samayam Tamil 23 May 2021, 6:13 pm
இந்திய தபால் துறை வாயிலாக மத்திய அரசு செயல்படுத்தி வரும் ஒன்பது சிறு சேமிப்புத் திட்டங்களில் கிசான் விகாஸ் பத்திரம் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் தொகை 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்களில் இரட்டிப்பாகி விடும். நீங்கள் பத்திரம் வாங்கிய பின்னர் இரண்டரை ஆண்டுகள் கழித்து உங்களால் பணத்தை எடுக்க முடியும்.கிசான் விகாஸ் பத்திரத்தைத் தனிநபரோ அல்லது மூன்று பேர் வரையில் கூட்டாகவோ வாங்க முடியும். 10 வயதுக்கு மேற்பட்ட மைனர் கூட இந்த பத்திரத்தை வாங்கலாம். அவரது பெயரில் வயது வந்த பாதுகாவலர் அல்லது உறவினர் வாங்க முடியும்.
Samayam Tamil KVP


நாட்டிலுள்ள எந்தவொரு அஞ்சல் நிலையத்திலும் இந்த கிசான் விகாஸ் பத்திரத்தை நீங்கள் வாங்க முடியும். ஒரு நபரின் பெயரில் இருந்து மற்றொரு நபரின் பெயருக்கு இந்தப் பத்திரத்தை மாற்ற முடியும். அதேபோல, ஒரு தபால் நிலையத்திலிருந்து மற்றொரு தபால் நிலையத்துக்கு நீங்கள் பத்திரக் கணக்கை மாற்றிக்கொள்ளலாம். கிசான் விகாஸ் பத்ரா திட்டத்துக்கான வட்டி விகிதத்தை ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு முறை மத்திய அரசு நிர்ணயம் செய்கிறது. தற்போதைய நிலவரப்படி இத்திட்டத்தில் 6.9 சதவீத வட்டி கிடைக்கிறது. இதன்படிப் பார்த்தால் நீங்கள் முதலீடு செய்யும் தொகை 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்களில் இரட்டிப்பாகி விடும்.

அடேங்கப்பா... பணம் எடுக்க இவ்வளவு கட்டணமா?

இத்திட்டத்தில் நீங்கள் குறைந்தது 1,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது. நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்ய முடியும். கொரோனா போன்ற சமயங்களில் சந்தையில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதால் இதுபோன்ற உத்தரவாதம் தரும் திட்டங்கள் உங்களுக்கு சிறந்த தேர்வாக அமையும். சந்தை நிலவரங்களால் இத்திட்டத்தில் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்