ஆப்நகரம்

முதலீட்டில் வெற்றிபெற இளைஞர்கள் இதை செய்யணும்.. வாரன் பஃபெட் அறிவுரை!

பங்குச் சந்தை முதலீட்டில் வெற்றிபெறுவதற்கு இளைஞர்களுக்கு வாரன் பஃபெட் கொடுத்த அட்வைஸ்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 26 Feb 2023, 5:22 pm
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும், முதலீட்டாளருமான வாரன் பஃபெட் (Warren Buffett) ஒவ்வொரு ஆண்டும் தனது பெர்க்‌ஷைர் ஹாத்வே (Berkshire Hathaway) நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு கடிதம் எழுதுவது வழக்கம். இந்த கடிதத்துக்காக பங்குதாரர்கள் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அவரது ரசிகர்களும், தொழில் துறையினரும், முதலீட்டாளர்களும் காத்திருப்பார்கள்.
Samayam Tamil warren buffett
warren buffett


இந்நிலையில், பெர்க்‌ஷைர் ஹாத்வே நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு வாரன் பஃபெட் இந்த ஆண்டுக்கான கடிதத்தை எழுதியுள்ளார். அதில், அவர் பய்பேக் நடவடிக்கைகளை விமர்சிப்பவர்களை கடுமையாக சாடியுள்ளார். மேலும், இளம் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் தனது அறிவுரையை வழங்கியுள்ளார்.

பய்பேக் (Buyback) என்பது ஒரு நிறுவனம் பங்குதாரர்களிடம் இருந்து தனது பங்குகளை விலை கொடுத்து வாங்கிக்கொள்வதாகும். பொதுவாக பய்பேக் நடவடிக்கைகளில் அதிக தொகை கொடுத்து பங்குகள் வாங்கப்படுவதால் பங்குதாரர்கள் லாபம் அடைவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த ஆண்டு அமெரிக்க அரசு பய்பேக் நடவடிக்கைகள் மீது 1% வரி விதித்து உத்தரவிட்டது. மேலும், இந்த வரியை 4% ஆக உயர்த்த முடிவு செய்திருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்கெனவே சிக்னல் கொடுத்துவிட்டார்.

இந்த சூழலில், பய்பேக் நடவடிக்கைகள் பங்குதாரர்களுக்கு ஆபத்தானது என கூறுபவர்களும், பய்பேக் நடவடிக்கைகள் CEOக்களுக்கு மட்டுமே பயனளிக்கும் என கூறுபவர்களும் பொருளாதார அறிவு இல்லாதவர்கள் என வாரன் பஃபெட் கடுமையாக சாடியுள்ளார்.

மேலும், சரியான விலையில் பங்குகளை வாங்கியோர் பய்பேக் நடவடிக்கைகளால் பயன் அடைவார்கள் எனவும் வாரன் பஃபெட் தெரிவித்துள்ளார். தனது பங்குதாரர்கள் தொடர்ந்து சேமித்து வருமானம் மூலம் வளம் பெறுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமல்லாமல், இளம் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டு பயணத்தை விரைவில் தொடங்க வேண்டுமெனவும், சில பங்குகள் வெற்றி பெற்றுவிட்டாலே Portfolioவில் அதிசயம் நடக்கும் எனவும் வாரன் பஃபெட் தெரிவித்துள்ளார். இதை குறிப்பிடும் வகையில், மலர்கள் மலர்ந்த பின் களைகள் காய்ந்துவிடும் என்று வாரன் பஃபெட் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்