ஆப்நகரம்

சீனியர் சிட்டிசன்கள் ஏமாற்றம்.. ரிசர்வ் வங்கி முடிவால் கவலை!

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தாமல் நிறுத்தியுள்ள நிலையில் சீனியர் சிட்டிசன்கள் ஏமாற்றம்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 6 Apr 2023, 2:49 pm
ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தும் என சீனியர் சிட்டிசன்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துவிட்டது. இதனால் சீனியர் சிட்டிசன்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Samayam Tamil big disappointment for senior citizen as reserve bank of india pauses repo rate hike in april 2023 mpc meet
சீனியர் சிட்டிசன்கள் ஏமாற்றம்.. ரிசர்வ் வங்கி முடிவால் கவலை!


​ரிசர்வ் வங்கி கொள்கை கூட்டம்​

ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் ஏப்ரல் 3ஆம் தேதி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்தா தாஸ் தலைமையில் தொடங்கி இன்று முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து கொள்கை கூட்டத்தின் முடிவுகளை சக்திகந்தா தாஸ் வெளியிட்டார்.

​வட்டி விகிதத்தில் மாற்றமில்லை​

2022 மே மாதம் முதல் ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டி விகிதத்தை உயர்த்திக்கொண்டே வருகிறது. தற்போது ரெப்போ வட்டி 6.50% ஆக இருக்கிறது. இந்நிலையில், ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

​வட்டி உயர்வால் என்னாகும்?​

ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் வங்கிகள் வைப்பு நிதி (FD) திட்டத்துக்கு வட்டி விகிதத்தை உயர்த்துவார்கள். எனவே, ரெப்போ வட்டி விகிதம் உயர்வு FD முதலீட்டாளர்களுக்கு பலனளிக்கும்.

​சீனியர் சிட்டிசன்களின் எதிர்பார்ப்பு​

FD திட்டங்களில் சீனியர் சிட்டிசன்களே அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். ஓய்வுக்காலத்தில் பாதுகாப்பான முதலீடு என்பதால் FD திட்டங்களில் சீனியர் சிட்டிசன்கள் முதலீடு செய்கின்றனர். வங்கிகளும் FD திட்டங்களில் சீனியர் சிட்டிசன்களுக்கு ஸ்பெஷலாக கூடுதல் வட்டி வழங்குகின்றன.

​ஏமாற்றத்தில் சீனியர் சிட்டிசன்கள்​

இந்நிலையில், மீண்டும் ரெப்போ வட்டி விகிதம் அதிகரிக்கும் என சீனியர் சிட்டிசன்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தாமல் நிறுத்தியுள்ளது. இது சீனியர் சிட்டிசன்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்