ஆப்நகரம்

பென்சன் வாங்குவோருக்கு நிம்மதி.. வெளியான சூப்பர் அறிவிப்பு!

பென்சன் வாங்குவோருக்கு மிகப்பெரிய நிவாரணம் வழங்கிய அறிவிப்பு.

Samayam Tamil 21 Nov 2021, 7:27 pm
கணவன் அல்லது மனவையின் பென்சன் தொகையை பெறுவதற்கு கூட்டு வங்கிக் கணக்கு (joint bank account) தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பென்சன் வாங்குவோருக்கு மிகப்பெரிய நிவாரணச் செய்தியாக வெளியாகியுள்ளது.
Samayam Tamil Pensioner


பணி ஓய்வு பெறுவோர் மற்றும் பென்சன் வாங்குவோரின் வாழ்வை எளிதாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய பணியாளர் மற்றும் பென்சன் துறை இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

புதிய விதிகளின்படி, பணி ஓய்வு பெறும் ஒரு அரசு ஊழியர் தனது கணவன் அல்லது மனைவி பேரில் கூட்டு கணக்கு தொடங்க முடியாது என அலுவலகத்தின் தலைவருக்கு திருப்திகரமான காரணங்கள் இருந்தால், கூட்டுக் கணக்கு இல்லாமலேயே சம்பந்தப்பட்ட நபர் பென்சன் பெறலாம் என அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு கூறுகிறது.

பென்சன் தொகை உயர்வு.. அதுவும் இந்த மாதமே.. ஹேப்பி நியூஸ்!
மேலும், பென்சன் வாங்கும் நபர் கூட்டுக் கணக்கை தேர்வு செய்தால், சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் புதிய வங்கிக் கணக்கு திறக்கும்படி கட்டாயப்படுத்தக்கூடாது என்று வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்