ஆப்நகரம்

அரசு ஊழியர்களுக்கு அட்டகாச அறிவிப்பு.. சம்பள உயர்வு வந்தாச்சு!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 31 Mar 2022, 8:50 am
கடந்த சில வாரங்களாகவே மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பான செய்திகள் தீவிரமாகப் பரவிக் கொண்டிருந்தன. இந்த நிதியாண்டின் முடிவுக்குள் அகவிலைப்படி ஊயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் காத்திருந்தனர். அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக இன்று அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Samayam Tamil DA


இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள 31 சதவீதத்திற்கு மேல் 3% உயர்த்தி வழங்கப்படும். அதாவது இனி மத்திய அரசு ஊழியர்களுக்கு 34 சதவீத அகவிலைப்படி கிடைக்கும். 2022 ஜனவரி 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு இந்த அகவிலைப்படி வழங்கப்படும். 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையை ஏற்று இந்த முடிவு முடிவை மத்திய அரசு அதிரடியாக எடுத்துள்ளது.

அகவிலைப்படி அரியர் எப்போ கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்!
இதன்மூலம் மத்திய அரசுக்கு ரூ.9,544.5 கோடி செலவினம் ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள். இந்த உயர்வுக்குப் பிறகு இந்த உயர்வுக்குப் பிறகு பெரும்பாலான அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.90,000 வரையில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பள உயர்வைப் பொறுத்தவரையில், உதாரணமாக அரசு ஊழியர் ஒருவரின் சம்பளம் ரூ.30,000 எனில், அவருக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு கிடைத்தால், மாத சம்பளத்தில் ரூ.900 அதிகமாகக் கிடைக்கும். அதாவது, ஒரு வருடத்துக்கு ரூ.10,800 வரையில் சம்பளம் உயரும் என்று மதிப்பிடப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்