ஆப்நகரம்

டைம்ஸ் செல்வாக்கு மிக்க 100 நபர்கள் 2022.. கௌதம் அதானி, வழக்கறிஞர் கருணா நந்திக்கு இடம்!

கோடீஸ்வர தொழிலதிபர் கௌதம் அதானி, வழக்கறிஞர் கருணா நந்தி ஆகியோர் 2022 ஆம் ஆண்டின் டைம்ஸின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் இடம்பெற்றுள்ளனர்.

Samayam Tamil 24 May 2022, 11:46 am
2022 ஆம் ஆண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் டைம்ஸ் பத்திரிக்கை நேற்று வெளியிட்டுள்ளது. கோடீஸ்வர தொழிலதிபர் கெளதம் அதானி மற்றும் வழக்கறிஞர் கருணா நந்தி ஆகியோர் 100 நபர்களில் இடம்பெற்றுள்ளனர்.
Samayam Tamil adani nundy


இந்தப் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், டென்னிஸ் ஐகான் ரஃபேல் நடால், ஆப்பிள் சிஇஓ டிம் குக் மற்றும் ஊடக அதிபர் ஓப்ரா வின்ஃப்ரே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டைம்ஸ் மதிப்பீட்டில் அதானியின் சுயவிவர அடிப்படையில், அதானியின் பிராந்திய வணிகம் இப்போது விமான நிலையங்கள், தனியார் துறைமுகங்கள், சூரிய சக்தி மற்றும் அனல் மின்சாரம் மற்றும் நுகர்வோர் பொருட்களை விரிவுபடுத்தியது. இதனால், அதானி குழுமம் இப்போது உலக பொருளாதாரத்தில் ஆறாவது பெரிய தேசிய பெஹிமோத் ஆக உள்ளது. இருப்பினும் அதானி மக்கள் பார்வையில் இருந்து விலகி அமைதியாக தனது சாம்ராஜ்யத்தை கட்டமைப்பதாக குறிப்பிட்டுள்ளது.

அதேபோல், கருணா நந்தி ஒரு வழக்கறிஞர் மட்டுமல்லாமல், நீதிமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தனது குரலை திறமையாகவும் துணிச்சலாகவும் பயன்படுத்தி மாற்றத்தைக் கொண்டுவரும் ஒரு பொது ஆர்வலராக உள்ளார். மேலும், அவர் பெண்களின் உரிமைகளுக்காகப் போராடியவர். கற்பழிப்பு தடுப்புச் சட்டங்களின் சீர்திருத்தம் மற்றும் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகளை எதிர்த்துப் போராடினார்.சமீபத்தில், திருமண கற்பழிப்புக்கு சட்ட விலக்கு அளிக்கும் இந்தியாவின் கற்பழிப்புச் சட்டத்திற்கு எதிராக அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஆசிய கூட்டமைப்பின் தலைவர் குர்ரம் பர்வேஸும் இந்தப் பட்டியலில் உள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்