ஆப்நகரம்

அம்பானி எனக்கு ரோல் மாடல்.. இந்தியாவே வளர்ந்தது.. அதானி ஓப்பன் டாக்!

திருபாய் அம்பானி தனக்கு ரோல் மாடல் எனவும், முகேஷ் அம்பானி தனது நல்ல நண்பர் எனவும் கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 9 Jan 2023, 5:23 pm
அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி தற்போது இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் மிகப்பெரிய பணக்காரராக இருக்கிறார். மேலும் உலகளவில் மூன்றாவது மிகப்பெரிய பணக்காரராக இருந்து வருகிறார். அதானிக்கு முன், ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இருந்தார்.
Samayam Tamil Ambani Adani
Ambani Adani


தற்போது ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக கவுதம் அதானியும், இரண்டாவது பெரிய பணக்காரராக முகேஷ் அம்பானியும் இருக்கின்றனர். அம்பானிக்கும், அதானிக்கும் இடையே பெரிய போட்டி இருக்கிறது என்பதே பொது மனநிலையாக உள்ளது.

ஆனால், முகேஷ் அம்பானி தனது நண்பர் எனவும், அவரது தந்தையார் திருபாய் அம்பானி தனது ரோல் மாடல் எனவும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார் கவுதம் அதானி. இதுகுறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவுதம் அதானி, “திருபாய் அம்பானி பல லட்சக்கணக்கான தொழில் முனைவோருக்கு ரோல் மாடல். எங்களுக்கு எல்லாம் உத்வேகம் கொடுப்பவர்.

படிச்சிருந்தா இன்னும் நல்லா இருந்துருப்பேன்.. மனம் திறந்த அதானி
எந்தவொரு ஆதரவும், வளங்களும் இல்லாத சாதாரண மனிதன் எப்படி எல்லா தடைகளையும் தாண்டி உலகத் தரம் வாய்ந்த தொழில் நிறுவனத்தை கட்டமைப்பது என்பதை மட்டுமல்லாமல், தனக்கு பின் ஒரு மரபை விட்டுச் செல்ல வேண்டும் என்பதையும் திருபாய் அம்பானி காட்டியுள்ளார். முதல் தலைமுறை தொழில்முனைவராக இருப்பதால் நான் அவரால் பெரிதும் உத்வேகம் பெற்றேன்.

முகேஷ் அம்பானியும் எனக்கு மிகவும் நல்ல நண்பர். நான் அவரை மிகவும் மதிக்கிறேன். பாரம்பரிய பெட்ரோகெமிக்கல் தொழில் மட்டுமல்லாமல் ஜியோ, டெக்னாலஜி, சில்லறை வணிகம் என ரிலையன்ஸ் குழுமத்துக்கு புதிய வழியை காட்டியவர் முகேஷ் அம்பானி. அவரது முயற்சிகள் எல்லாம் இப்போது நாட்டின் வளர்ச்சியாக மாறியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

முகேஷ் அம்பானியை முந்தி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக கவுதம் அதானி முன்னேறியுள்ளார். இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, “நான் எண்ணிக்கையை பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை” என்று கூறினார்.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்