ஆப்நகரம்

படிச்சிருந்தா இன்னும் நல்லா இருந்துருப்பேன்.. மனம் திறந்த அதானி

அதானி நிறுவனத்தின் வளர்ச்சி, கல்வி, தொழில், கடந்த காலம் என மனம் திறந்த கவுதம் அதானி.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 8 Jan 2023, 5:53 pm
அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி தற்போது இந்தியாவில் மட்டுமல்லாமல் ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரராக இருக்கிறார். உலகளவில் மூன்றாவது மிகப்பெரிய பணக்காரராகவும் இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளில் அதானியின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது.
Samayam Tamil Gautam Adani
Gautam Adani


இந்நிலையில், கவுதம் அதானி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தனது வளர்ச்சி, கல்வி, ரோல் மாடல் என பல்வேறு விஷயங்களை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது, அவரின் வெற்றிக்கான ரகசியம் என்ன என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த கவுதம் அதானி, “இது ஒன்றும் கணிதமோ, அறிவியலோ இல்லை. கடின உழைப்புதான் ஒரே ஃபார்முலா. தொழிலிலும், நடைமுறை வாழ்விலும் இதே ஃபார்முலா வேலை செய்யும். குடும்பம், நிறுவனத்தினர், கடவுள் ஆகியோரால் நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன்.

வெற்றிக்கு எந்தவொரு குறுக்கு வழியும் இல்லை. நல்ல நோக்கங்களுடன் கடினமாக உழைத்துவிட்டு, மீதத்தை கடவுளிடம் விட்டுவிடலாம். இதுதான் ஒரே ஃபார்முலா” என்று தெரிவித்தார்.

சொந்தமாக தொழில் தொடங்க.. தொழில்முனைவோருக்கு சிறப்பு முகாம்.. இதை விட்டுடாதிங்க!
அதானி வளர்ச்சி

அதானி நிறுவனத்தின் வருமானம் வளர்ச்சி குறித்து அவர் பேசியபோது, “நாடு வளர்ச்சி பாதையில் செல்வதால் எங்கள் வருமானம் அதிகரித்துள்ளது. இந்தியாவின் இன்றைய சூழலை வைத்து பார்த்தால், அடுத்த 20 - 30 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி உலகையே பிரம்மிக்க வைக்கும். நம் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது” என்று கூறினார்.

கல்வி

தனது கல்வி மற்றும் கல்வியின் முக்கியத்துவம் பற்றி பேசிய அதானி, “15 வயதில் 10ஆவது வகுப்பை முடித்தேன். அதன்பின் படிக்காமல் மும்பைக்கு சென்றுவிட்டேன். பின்னர் மீண்டும் அகமதாபாத் வந்து தொழில் செய்ய முடிவு செய்தேன். குடும்ப தொழில் தவிர வேறு ஏதாவது செய்ய வேண்டும் என விரும்பினேன்.

குடும்பமும் அதற்கு ஆதரவு அளித்தது. என்னிடம் பணம் குறைவாகவே இருந்தது கஷ்டங்கள் நிறைய இருந்தது. கடினமான சூழலில் நிறைய பேர் எனக்கு உதவினார்கள். அவர்களால்தான் இப்போது இந்த நிலையில் இருக்கிறேன்.

நான் கணிதம், தொழில்நுட்ப பாடங்களை சிறப்பாக படித்தேன். ஆனால், படிப்பை விட்டுவிட்டு தொழிலுக்கு வந்துவிட்டேன். படிப்புக்கு பதிலாக கடின உழைப்பையும், அனுபவத்தையும் தேர்வு செய்தேன். நான் படித்திருந்தால், இப்போது இருக்கும் நிலையை விட இன்னும் சிறப்பான நிலையில் இருந்திருப்பேன்” என்று தெரிவித்தார்.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்