ஆப்நகரம்

இந்தியாவில் முதன்முதலாக பிட் காயினுக்கு ஏடிஎம் துவக்கம்!

இந்தியாவில் முதன்முதலாக கிரிப்டோ கரண்சிகளுக்காக தனியாக ஏடிஎம் துவங்கப்பட்டுள்ளது

Samayam Tamil 18 Oct 2018, 3:32 pm
இந்தியாவில் பிட் காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரண்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பெங்களுருவில் கிரிப்ட்டோ கரண்சி ஏடிஎம் துவங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Bitcoin ATM


விர்ச்சுவல் கரண்சி எனப்படும பிட் காயின் புழக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்த முறையில் பணம் யாரால் யாருக்கு கொடுக்கப்படுகிறது என்பது கண்டுபிடிக்க முடியாது. மேலும், கிரிப்டோ காயின் புழக்கத்தால்,10 சதவீத விலை வீழ்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே, நடப்பு நிதியாண்டுக்கான முதல் கொள்கையில், பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரெண்சி வணிகத்தில் ஈடுபடும் அமைப்புகளோடு நிதிநிறுவனங்கள் எந்த உறவும் வைத்துக்கொள்ளக்கூடாது எனு்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும், இது போன்ற கிரப்டோ கரண்சி வைத்திருப்பவர்கள், பணமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் கூறியது.

இந்நிலையில் இந்தியாவில் தற்போது முதன்முதலாக கிரிப்டோ கரண்சிகளுக்காக தனியாக ஏடிஎம் துவங்கப்பட்டுள்ளது. பெங்களுருவில் உள்ள கெம்ப் ஃபேராட் மாலில் தான் இந்த ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் அவர்களது யூசர் ஐடி-யைப் பயன்படுத்தி பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரண்சிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆர்பிஐ தடை விதித்திருந்தாலும், இன்னமும் சில ஆன்லைன் ஷாப்பிங், வர்த்தகங்களில் கிரிப்டோ கரண்சி பணம் பெற்றுக் கொள்ளப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்