ஆப்நகரம்

பெண்கள் கையில் பணம் கொடுங்க.. ஆனால் ஆண்கள் கையில்.. வானதி சீனிவாசன் பேச்சால் சலசலப்பு!

பெண்கள் கையில் கொடுக்கப்படும் பணம் குடும்பத்துக்கு பயன்படும் என வானதி சீனிவாசன் பேச்சு.

Samayam Tamil 28 Apr 2022, 5:00 pm
பெண்கள் கையில் பணம் இருந்தால் அது குடும்பத்துக்காக பயன்படும் எனவும், ஆண்கள் கையில் இருக்கும் பணம் பீடி, சிகரெட், டாஸ்மாக் என வீணாகிவிடும் என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் சட்டமன்றத்தில் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.
Samayam Tamil vanathi srinivasan


மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்வது தொடர்பாக சட்டமன்றத்தில் இன்று ஆலோசனை நடைபெற்றது. அப்போது கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பேசியபோது, “மகளிர் சுய உதவிக் குழுக்கள் வறுமையை போக்குவதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.

பெண்களுடைய வருமானம் என்பது முழுக்க முழுக்க குடும்பத்துக்காக செலவிடப்படுகிறது. குடும்பத்தின் உடல்நிலை, பாதுகாப்பு, குழந்தைகளின் கல்வி என பெண்கள் கையில் கொடுக்கப்படும் பணம் முழுவதும் குடும்பத்துக்காக செலவு செய்யப்படுகிறது.

மோடிக்கு பிடிஆர் பதிலடி.. பெட்ரோல் வரியை 300% உயர்த்திய மத்திய அரசு!
ஆண்கள் கையில் வரும் வருமானம் கூட பீடி, சிகரெட், டாஸ்மாக் என போய்விடும்” என்று பேசினார். அப்போது சட்டமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, “மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை ஆன்லைனில் விற்பது பற்றி மட்டும் பேசுங்க” என்று அறிவுறுத்தினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்