ஆப்நகரம்

ஒரு மணி நேரத்துக்கு ரூ.12 கோடி வருமானம்.. யாருப்பா இவரு?

2022ஆம் ஆண்டில் ஒரு மணி நேரத்துக்கு 12 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிய ஸ்டீவ் ஸ்வார்ஸ்மன்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 26 Feb 2023, 11:43 am
அண்மைக்காலமாக மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் இருப்பவர்களின் சொத்து மதிப்பு தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. இவ்வகையில், பிளாக்ஸ்டோன் நிறுவனத்தின் CEO ஸ்டீவ் ஸ்வார்ஸ்மன் (Steve Schwarzman) 2022ஆம் ஆண்டில் ஒவ்வொரு மணி நேரமும் 12 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்.
Samayam Tamil Stephen Schwarzman
Stephen Schwarzman


அமெரிக்காவை சேர்ந்த பிளாக்ஸ்டோன் (Blackstone) நிறுவனம் முதலீட்டு வங்கி சேவைகளை வழங்கி வரும் முன்னணி நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனத்தை 1985ஆம் ஆண்டில் லீமன் பிரதர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் ceo பீட்டர் ஜி பீட்டர்சன் அவர்களுடன் இணைந்து ஸ்டீவ் ஸ்வார்ஸ்மன் தொடங்கினார்.

பின்னர் படிப்படியாக பிளாக்ஸ்டோன் நிறுவனம் மிகப்பெரிய முதலீட்டு வங்கி நிறுவனமாக வளர்ச்சி அடைந்தது. பிளாக்ஸ்டோன் நிறுவனத்தில் ஸ்டீவ் ஸ்வார்ஸ்மனுக்கு சுமார் 20% பங்குகள் இருக்கின்றன.

இந்நிலையில், பிளாக்ஸ்டோன் நிறுவனத்திடம் இருந்து 2022ஆம் ஆண்டில் மட்டும் 1.27 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளார் ஸ்டீவ் ஸ்வார்ஸ்மன். அவருக்கு CEO பதவிக்கான சம்பளமாக மட்டும் 253.1 மில்லியன் டாலர் வருமானம் கிடைத்துள்ளது.

இதுமட்டுமல்லாமல், அவரிடம் இருக்கும் 20% பிளாக்ஸ்டோன் பங்குகளிடம் இருந்து டிவிடெண்ட் வருமானமாக 1 பில்லியன் டாலர் கிடைத்துள்ளது. இதன்படி, 2022ஆம் ஆண்டில் அவர் ஒரு மணி நேரத்துக்கு சராசரியாக சுமார் 12 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார்.

அதற்கு முன் 2021ஆம் ஆண்டில் ஸ்டீவ் ஸ்வார்ஸ்மன் 1.1 பில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார். இதன்படி, அமெரிக்காவில் வால் ஸ்ட்ரீட்டில் அதிகம் வருமானம் ஈட்டும் நபர்களில் ஒருவராக ஸ்டீவ் முன்னேறியுள்ளார்.

Bloomberg உலக பணக்காரர்கள் பட்டியலின்படி, ஸ்டீவ் ஸ்வார்ஸ்மனின் சொத்து மதிப்பு 30.6 பில்லியன் டாலராக உள்ளது. அவர் தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் 39ஆம் இடத்தில் இருக்கிறார்.

ஸ்டீவ் ஸ்வார்ஸ்மன் மட்டுமல்லாமல், பிளாக்ஸ்டோன் நிறுவனத்தில் Chief Operating Officer ஜான் கிரே (Jon Gray) அவர்களும் 2022ஆம் ஆண்டில் 479.2 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளார். இவருக்கு பிளாக்ஸ்டோன் நிறுவனத்தில் 3% பங்கு இருக்கிறது. இந்த பங்குகளில் இருந்து டிவிடெண்ட் தொகையாக அவருக்கு 182.7 மில்லியன் டாலர் கிடைத்துள்ளது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்