ஆப்நகரம்

கையேந்தும் மாநிலங்கள்... முதலிடத்தில் தமிழகம்!

ஊரடங்கு காலத்தில் இந்திய மாநிலங்கள் 1.7 லட்சம் கோடிக்கு மேல் கடன் வாங்கியுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

Samayam Tamil 4 Jul 2020, 9:27 pm
Samayam Tamil debt
இந்தியாவில் கடந்த நான்கு மாதங்களாகவே கொரோனா ஊரடங்கால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது மட்டுமல்லாமல் இந்தியப் பொருளாதாரமே வரலாறு காணாத வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தொழில் நடவடிக்கைகள் அனைத்தும் முடங்கி அனைத்து தரப்பிலும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மாநிலங்கள் அனைத்தும் அதிகளவில் செலவுசெய்தன. மத்திய அரசிடமிருந்து நிதியுதவிகள் கிடைத்தாலும் அது நிதி நெருக்கடியைச் சமாளிக்கப் போதுமானதாக இல்லை.

இதுபோன்ற சூழலில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கடன் வாங்கும் அளவை மத்திய அரசு உயர்த்தியது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இந்திய மாநிலங்கள் அளவுக்கு அதிகமாகக் கடன் வாங்கியுள்ளதாக இக்ரா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இக்ரா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இந்திய மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இணைந்து மொத்தம் ரூ.1.7 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளன. இது 2019ஆம் ஆண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் வாங்கிய கடனை விட இரு மடங்கு அதிகமாகும். அப்போது மொத்தம் ரூ.80,000 கோடி கடன் வாங்கியிருந்தன.

சிறு நிறுவனங்களுக்கு ரூ.50,000 கோடி!

இந்திய மாநிலங்களிலேயே தமிழகம்தான் அதிகமாகக் கடன் வாங்கியுள்ளது. ரூ.28,000 கோடியை ஏப்ரல் - ஜூன் காலாண்டில் தமிழகம் கடனாக வாங்கியுள்ளது. தமிழகத்தைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா ரூ.25,500 கோடியும், ராஜஸ்தான் ரூ.16,000 கோடியும், ஆந்திரப் பிரதேசம் ரூ.15,000 கோடியும், தெலங்கானா ரூ.12,500 கோடியும், கேரளா ரூ.12,400 கோடியும், மேற்குவங்கம் ரூ.10,000 கோடியும், ஹரியானா ரூ.9,000 கோடியும், குஜராத் ரூ.8,600 கோடியும், கர்நாடகா ரூ.7,000 கோடியும் வாங்கியுள்ளன. மேற்கூறிய மாநிலங்கள் மட்டும் ஒட்டுமொத்த கடன் தொகையில் 86.1 சதவீதப் பங்களிப்பைக் கொண்டுள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்