ஆப்நகரம்

யார் கைக்கு போகிறது பாரத் பெட்ரோலியம்?

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை வாங்க சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளன.

Samayam Tamil 25 Jul 2020, 8:11 pm

பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவை அரசு மாற்றிக்கொள்ள வேண்டுமென ஊழியர்கள் உள்ளிட்ட பலர் வலியுறுத்தினர். எனினும், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை விற்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil பாரத் பெட்ரோலியம்


கொள்ளை லாபத்தில் ஐசிஐசிஐ பேங்க்!

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை வாங்க சர்வதேச எண்ணெய் நிறுவனங்களும், சில இந்திய நிறுவனங்களும் விருப்பம் தெரிவித்துள்ளன. பாரத் பெட்ரோலியம் விசாரணை குறித்து சுமார் 100 நிறுவனங்கள் தகவல்களை கோரியுள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.

சவுதி அரேபியாவை சேர்ந்த சவுதி அராம்கோ, ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த அபுதாபி நேஷனல் ஆயில் கோ, ரஷ்யாவை சேர்ந்த ரோஸ்னெஃப்ட், அமெரிக்காவை சேர்ந்த எக்ஸான் மொபில் ஆகிய சர்வதேச ஜாம்பவான்கள் கூட பாரத் பெட்ரோலியம் விற்பனை ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.

சூப்பர் சலுகை: தங்கக் கடன் வட்டியை குறைத்த இந்தியன் வங்கி!

இந்திய நிறுவனங்களும் வேடிக்கை பார்ப்பதாக இல்லை. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. பாரத் பெட்ரோலியம் ஏலத்தில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 31 கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 31 காலக்கெடுவிற்குள் போதிய விண்ணப்பதாரர்கள் வந்துவிடுவார்கள் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும், இந்த காலக்கெடு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் அரசின் வசம் இருக்கும் 52.98 விழுக்காடு பங்குகளையும் விற்பனை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்