ஆப்நகரம்

பிரெக்ஸிட் பாதிப்பு இந்தியாவுக்கு இனி இல்லை: மூடிஸ் நிறுவனம் தகவல்

பிரெக்ஸிட் காரணமாக இனிவரும் நாட்களில், இந்தியாவுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை என்று, மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

TNN 11 Jul 2016, 7:15 pm
பிரெக்ஸிட் காரணமாக இனிவரும் நாட்களில், இந்தியாவுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை என்று, மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil brexit not to have major impact on india moodys
பிரெக்ஸிட் பாதிப்பு இந்தியாவுக்கு இனி இல்லை: மூடிஸ் நிறுவனம் தகவல்


ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் விதமாக, இங்கிலாந்து சமீபத்தில் பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. அதில், ஏராளமான மக்கள் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற ஆதரவு தெரிவிக்கவே, அம்முடிவை செயல்படுத்துவதாக, இங்கிலாந்து அரசு அறிவித்தது. இத்தகவல் சர்வதேச அளவில் பெரும் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

இதனால், கடந்த மாதத்தில் இந்தியா உள்பட சர்வதேச பங்குச்சந்தைகளின் வர்த்தகம் பெரிதும் பாதித்தது. இந்நிலையில், பிரக்ஸெட் காரணமாக, இந்தியாவுக்குப் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றும், இனிவரும் நாட்களிலும் அதற்கு வாய்ப்பு இல்லை என்றும் மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிரெக்ஸிட் காரணமாக, இந்தியா உள்ளிட்ட ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகள், வர்த்தகக் கொள்கைகளில் சில திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. அதேசமயம், இந்தியாவின் பொருளாதார கொள்கைகள் பெரும்பாலும் தேசியமயமாக்கப்பட்ட சூழலில் இயங்குவதால், எத்தகைய சர்வதேச பாதிப்பையும் தாங்கும் நிலை அந்நாட்டுக்கு உள்ளதென்றும் மூடிஸ் குறிப்பிட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்