ஆப்நகரம்

அதானிக்கு மேலும் சிக்கல்.. தடை விதித்த சர்வதேச வங்கி!

அதானி நிறுவனங்களின் பத்திரங்களை ஏற்க முடியாது என ஸ்டாண்டர்ட் சார்டர்ட் வங்கி முடிவு.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 6 Feb 2023, 5:47 pm
அதானி குழுமம் மோசடி புகார்களில் சிக்கி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால், ஏற்கெனவே சில சர்வதேச வங்கிகள் அதானி பத்திரங்களை பிணையாக ஏற்க முடியாது என தெரிவித்துள்ளன. இந்த வரிசையில் இப்போது இங்கிலாந்தை சேர்ந்த பிரபல வங்கியான ஸ்டாண்டர்ட் சார்டர்ட் வங்கியும் (Standard Chartered) அதானி பத்திரங்களை ஏற்கப்போவதில்லை என முடிவு செய்துள்ளது.
Samayam Tamil standard chartered
standard chartered


அதானி குழுமம் கணக்கு மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகளை செய்துள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் ஆய்வு நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், அதானிக்கு 88 கேள்விகளும் வைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து. அதானி நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இதனால், உலக பணக்காரர்கள் பட்டியலில் 3ஆம் இடத்தில் இருந்த கவுதம் அதானி இப்போது 21ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அவரது சொத்து மதிப்பு 61.6 பில்லியன் டாலர் சரிந்துள்ளது.

இதற்கிடையே, சர்வதேச சந்தையில் அதானி நிறுவனங்களின் கடன் பத்திரங்கள் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. அதானியின் கடன் பத்திரங்களின் மதிப்பு ஒரு பக்கம் கடுமையாக சரிந்துள்ளது. இதுமட்டுமல்லாமல், அதானி மீது இருக்கும் புகார்களால் அதானி பத்திரங்களை இனி பிணையாக ஏற்க முடியாது என சுவிச்சர்லாந்தை சேர்ந்த பிரபல கிரெடிட் சூயிஸ் (credit suisse) வங்கி முடிவு செய்தது.

இதைத்தொடர்ந்து, அமெரிக்காவை சேர்ந்த சிட்டிகுரூப் (citigroup) வங்கியும் அதானி பத்திரங்களை பிணையாக ஏற்க முடியாது என முடிவு செய்துவிட்டது. இந்த வரிசையில் இப்போது இங்கிலாந்தை சேர்ந்த ஸ்டாண்டர்ட் சார்டர்ட் (standard chartered) வங்கியும் அதானி பத்திரங்களை பிணையாக ஏற்பதை நிறுத்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக ஆசியாவில் சிங்கப்பூர் போன்ற முக்கிய சந்தைகளில் அதானி நிறுவனங்களின் பத்திரங்களுக்கு கடன் வழங்கப்படாது என ஸ்டாண்டர்ட் சார்டர்ட் வங்கியின் மேனேஜர்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்