ஆப்நகரம்

ஆகஸ்ட் 15 முதல் அனைத்து அழைப்புகளும் இலவசம் : பி.எஸ்.என்.எல். அறிவிப்பு

ஆகஸ்ட் 15ம் தேதி முதல் பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களுக்கு, ஞாயிறு கிழமைகளில் அனைத்து உள்ளூர் அழைப்புகளும் இலவசமாக பேசிக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

TOI Contributor 13 Aug 2016, 7:26 pm
டெல்லி : ஆகஸ்ட் 15ம் தேதி முதல் பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களுக்கு, ஞாயிறு கிழமைகளில் அனைத்து உள்ளூர் அழைப்புகளும் இலவசமாக பேசிக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
Samayam Tamil bsnl to offer unlimited free calls on sundays starting august 15
ஆகஸ்ட் 15 முதல் அனைத்து அழைப்புகளும் இலவசம் : பி.எஸ்.என்.எல். அறிவிப்பு


ஒவ்வொரு தொலைபேசி நிறுவனமும் தங்கள் பக்கம் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் பல்வேறு சலுகைகள், அறிவிப்புக்கள் அறிவிக்கின்றன. அதுபோல தற்போது பி.எஸ்.என்.எல் நிறுவனம வாடிக்கையாளர்களை கவரும் வகையில், ஆகஸ்ட் 15ம் தேதி முதல் பி.எஸ்.என்.எல் லேண்ட் லைன் வாடிக்கையாளர்கள் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை உள்நாட்டில் பேசும் அழைப்புகள் இலவசமாக பேசிக்கொள்ளலாம் என அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளது.

அதோடு, ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் முதல் நவம்பர் 14ம் தேதி வரை புதிய லேண்ட்லைன் இணைப்புகள் பெறுபவர்களுக்கு பிணையத்தொகை கிடையாது எனவும் அறிவித்துள்ளது.

வெறும் 49 ரூபாய் மாதக்கட்டண செலவில் இலவசமாக பேசும் சேவையை பெற முடியும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்