ஆப்நகரம்

20,000 ஊழியர்களை விரட்டும் BSNL - பரிதாப நிலையில் ஊழியர்கள்!

சுமார் 20,000 ஒப்பந்த ஊழியர்களை வெளியேற்ற பிஎஸ்என்எல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Samayam Tamil 5 Sep 2020, 12:10 pm

ஒப்பந்தப் பணிகளில் செலவைக் குறைக்கும்படி நாடு முழுவதும் இருக்கும் பிஎஸ்என்எல் அலுவலகங்களுக்கு பிஎஸ்என்எல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதன் விளைவாக பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 20,000 ஒப்பந்த ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil BSNL


பிஎஸ்என்எல் ஏற்கெனவே செலவுகளைக் குறைப்பதற்காக 30,000 ஒப்பந்த ஊழியர்களை நீக்கிவிட்டதாகவும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் கூறுகிறது. இதுமட்டுமல்லாமல், ஒப்பந்த ஊழியர்களுக்கு ஓராண்டுக்கும் மேலாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று ஊழியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

தேவையற்ற கொண்டாட்டங்கள், செலவுகளைக் குறைக்க அரசு உத்தரவு! அரசுக்கே இந்த நிலையா?

இதுதொடர்பாக பிஎஸ்என்எல் நிறுவனத் தலைவர் பி.கே.புர்வாருக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் எழுதியுள்ள கடிதத்தில், விஆர்எஸ் முறையை அமல்படுத்தியபின் நிறுவனத்தின் நிதி நிலை மோசமடைந்துள்ளதாகவும், பல்வேறு நகரங்களில் ஊழியர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நெட்வொர்க் சிக்கல்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

விஆர்.எஸ் அமல்படுத்திய பிறகும் ஊழியர்களுக்கு சரியான தேதியில் பிஎஸ்என்எல் நிர்வாகம் சம்பளம் வழங்குவதில்லை எனவும், கடந்த 14 மாதங்களில் 13 ஒப்பந்த ஊழியர்கள் நெருக்கடியால் தற்கொலை செய்துள்ளதாகவும் இக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 1ஆம் தேதியன்று பிஎஸ்என்எல் நிர்வாகம் வெளியிட்டுள்ள உத்தரவில், ஒப்பந்தப் பணிகளில் செலவை குறைக்கும்படியும், ஒப்பந்தம் மூலமான பணிகளை குறைக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளது. இதனால் ஏராளமான ஒப்பந்த ஊழியர்கள் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் வேலை இழக்கக்கூடும் என தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்