ஆப்நகரம்

ஜல்லிக்கட்டு காளை உருவத்துடன் வெளிவரும் தங்க,வைர நகை ஆபரணங்கள்

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக மக்கள் வெகுண்டெழுந்து மாபெரும் போராட்டம் நடத்தி அதில் வெற்றியும் பெற்றுள்ளது.

TNN 24 Jan 2017, 2:47 pm
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக மக்கள் வெகுண்டெழுந்து மாபெரும் போராட்டம் நடத்தி அதில் வெற்றியும் பெற்றுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளதால், நகை விற்பனையாளர்கள் காளைகளின் உருவம் பொறித்த தங்க, வைர நகைகள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
Samayam Tamil bulls images in gold jewelry production
ஜல்லிக்கட்டு காளை உருவத்துடன் வெளிவரும் தங்க,வைர நகை ஆபரணங்கள்


மக்களிடம் காளைகள் ஆதரவு பெற்றுள்ளதால், அவற்றின் உருவம் பொறித்த நகைகளை மக்கள் விரும்பி வாங்குவார்கள். இதுவரை குதிரை, யானை, மயில் போன்றவற்றி உருவங்கள் அதிகளவில் விற்றன. இனி காளைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும்.

இதன் காரணமாக காளைகள் உருவம் பொறித்த 50 ஆயிரம் நகைகள் தயார் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு காளைகள் பொறித்த நகைகள், பிரேஸ்லெட், நெக்லஸ், டாலர்கள் உள்ள ஆபரணங்கள் தயாரிக்கப்படுவது இதுவே முதன் முறை என நகை தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்