ஆப்நகரம்

பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிவு

வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கள்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்துள்ளன.

TNN 4 Jul 2016, 6:14 pm
வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கள்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்துள்ளன.
Samayam Tamil bulls keep winning streak intact sensex ends 134 points higher
பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிவு


சர்வதேச சந்தைகளில் காணப்பட்ட பங்கு விற்பனை குறைந்து, முதலீடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன்காரணமாக, இந்திய சந்தைகளும் இன்றைய வர்த்தகத்தை உயர்வுடன் தொடங்கின. உள்நாட்டில், தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே இருக்கும் என்று தொடர்ந்து உறுதி அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன், வரும் 18ம் தேதி கூட உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்படுவது உறுதி என்றும் கூறப்படுகிறது.

இதுபோன்ற தகவல்களால், முதலீட்டாளர்கள் பங்கு வர்த்தகத்தில் ஆர்வத்துடன் முதலீடு செய்தனர். முன்னணி நிறுவனப் பங்குகள் மட்டுமின்றி, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனப் பங்குகளும் அதிகளவில் விலை அதிகரித்தன. அன்றாட பயன்பாட்டுப் பொருட்கள் துறை தவிர, அனைத்துத் துறை பங்குகளும் விலை உயர்வுடன் முடிந்தன.

தனிப்பட்ட நிறுவனப் பங்குகளில், அதானி போர்ட்ஸ், ஓஎன்ஜிசி, ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ், கோல் இந்தியா, எல் அண்ட் டி, எஸ்பிஐ, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஆகியவை அதிகபட்ச விலை உயர்வை சந்தித்தன.

வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 134 புள்ளிகள் அதிகரித்து, 27,279 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 42 புள்ளிகள் உயர்வுடன் 8,371 புள்ளிகளாகவும் முடிந்தது.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்