ஆப்நகரம்

அகவிலைப்படி உயர்வு: சம்பளம் எவ்வளவு உயரும்? காத்திருக்கும் அரசு ஊழியர்கள்!

4 சதவீதம் எதிர்பார்ப்பு!

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 7 Feb 2023, 8:36 am
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டால் அவர்களது சம்பளம் எந்த அளவுக்கு உயரும் என்ற கணக்கீடு.
Samayam Tamil calculation of how much the salary of central govt employees will increase after dearness allowance hike
அகவிலைப்படி உயர்வு: சம்பளம் எவ்வளவு உயரும்? காத்திருக்கும் அரசு ஊழியர்கள்!


அகவிலைப்படி!

2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் சில நாட்களுக்கு முன்னர் (பிப்ரவரி 1) தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பு வெளியாகவில்லை. இது மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. எனினும், விரைவில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாக வாய்ப்பு உள்ளது.

4 சதவீதம் உயரும்!

தற்போதைய நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 38 சதவீதமாக இருக்கிறது. இதை 4 சதவீதம் உயர்த்தி 42 சதவீதமாக வைத்திருக்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது. எனினும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படியில் 4 சதவீத அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஊழியர்கள் எதிர்பார்ப்பு!

ஒவ்வொரு மாதமும் மத்திய தொழிலாளர் அமைச்சகத்தால் நுகர்வோர் விலைக் குறியீட்டின் புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி, டிசம்பர் மாதத்துக்கான புள்ளி விவரங்கள் ஜனவரி 31ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதன்படி கணக்கிட்டால் அகவிலைப்படி உயர்வு 4.23 சதவீதம் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. ரவுண்ட் ஆஃப் செய்து வழங்கப்படும் என்பதால் 4 சதவீத அகவிலைப்படி உயர்வை எதிர்பார்க்கலாம் என்கிறார் அனைத்திந்திய ரயில்வே அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான சிவ கோபால்.

சம்பள கணக்கீடு!

அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தால் 2023 ஜனவரி 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வரும். முன்னதாக 2022 செப்டம்பர் 28ஆம் தேதி அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியானது. அகவிலைப்படி உயர்வுக்கு முன்னும் பின்னும் ஊழியர்களுக்கான சம்பளம் எவ்வளவு என்று இங்கே பார்க்கலாம்.

8,000 சம்பளம்!

1லெவல் 1 பிரிவில் அடிப்படை சம்பளம் ரூ.18,000 கொண்ட அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38 சதவீதத்தில் மொத்தம் ரூ.6,840 ஆக உள்ளது. ஒருவேளை அகவிலைப்படி 42 சதவீதமாக உயர்த்தப்பட்டால் புதிய அகவிலைப்படி உயர்வு ரூ.7,560 ஆக இருக்கும்.

ரூ.53,100 சம்பளம்!

அதேபோல, லெவல் 9 பிரிவில் அடிப்படை சம்பளம் ரூ.53,100 கொண்ட அரசு ஊழியர்களின் புதிய அகவிலைப்படி உயர்வு ரூ.22,302 ஆக இருக்கும். எனவே கணக்கீடுகளின்படி, 2022 ஜூலை 1ஆம் தேதி திருத்தப்பட்ட அகவிலைப்படியுடன் ஒப்பிடும்போது, 2023 ஜனவரி 1 முதல் அகவிலைப்படி 2,124 ரூபாய் அதிகரிக்கும்.

da hike

எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்