ஆப்நகரம்

இந்த வருஷமாவது சம்பள உயர்வு கிடைக்குமா?

கொரோனா பாதிப்புகள் இருந்தாலும், நிறுவனங்கள் சம்பள உயர்வு வழங்கத் தயாராக இருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

Samayam Tamil 14 Apr 2021, 2:57 pm
சென்ற ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பெரும்பாலான நிறுவனங்கள் சம்பள உயர்வை நிறுத்தி வைத்தன. இதுமட்டுமல்லாமல், நிதி நெருக்கடி காரணமாகப் பலருக்கு சம்பளம் குறைக்கப்பட்டது. பலர் வேலையை விட்டே நீக்கப்பட்டனர். இந்த ஆண்டில் கொரோனா மருந்து பயன்பாட்டுக்கு வந்து இயல்பு நிலை திரும்பி வருவதால் வேலைவாய்ப்புகளும், சம்பளமும் பழையபடி கிடைக்கத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டாவது சம்பள உயர்வு கிடைக்குமா என்று ஊழியர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், மகிழ்ச்சியூட்டும் விதமாக, நிறுவனங்கள் சம்பள உயர்வு வழங்கத் தயாராக இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
Samayam Tamil salary


வேலை தேடுதல் மற்றும் பணியமர்த்துதல் நிறுவனமான ஜீனியஸ் கன்சல்டன்ஸ் சார்பாக நடத்தப்பட்ட ஆய்வில், 2021ஆம் ஆண்டில் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை வீசினாலும், சந்தை நிலவரம் சிறப்பாக இருப்பதால் சம்பள உயர்வு வழங்குவதில் பிரச்சினை இல்லை என்று இந்த ஆய்வில் பங்கேற்ற நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. நிறுவனத்தின் ஊழியர் எண்ணிக்கையை முழுவதுமாக உயர்த்திய பிறகு சம்பள உயர்வு கிடைக்கும் என்று 59 சதவீத நிறுவனங்கள் கூறியுள்ளன.

கம்மி விலையில் கார்... பட்டையை கிளப்பும் பட்ஜெட் கார்கள்!!

பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 1,200 நிறுவனங்கள் பங்கேற்றன. கட்டுமானம், பொறியியல், நிதிச் சேவைகள், வங்கி, கல்வி, விருந்தோம்பல், மனிதவள மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம், லாஜிஸ்டிக்ஸ், உற்பத்தி, ஊடகம், மருந்து, எண்ணெய் மற்றும் எரிவாயு, மின்சாரம், ஆற்றல், ரியல் எஸ்டேட், சில்லறை வர்த்தகம், ஆட்டோமொபைல், தொலைத் தொடர்பு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்த ஆய்வில் சம்பள உயர்வு குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளன.

பெரும்பாலான நிறுவனங்கள் 5 முதல் 10 சதவீதம் வரையில் சம்பள உயர்வு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளன. ஆனால் 20 சதவீத நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு 5 சதவீதத்தை விடக் குறைவான அளவிலேயே சம்பள உயர்வு வழங்கப்படும் என்று கூறியுள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்