ஆப்நகரம்

வீடு கட்ட கடன் வாங்கியவர்கள் தனிநபர் கடன் வாங்க முடியுமா?

வங்கியில் கடன் வாங்குவதற்கு முன்பாக நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் இதோ..

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 4 Dec 2022, 3:33 pm
இன்றைய காலத்தில் மக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய கடன் அதிகமாக வாங்குகின்றனர். கடன் வாங்குவதன் மூலம், மக்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப எதையாவது வாங்க முடிகிறது; திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செலவு செய்யவும் முடியும். வீட்டுக் கடன், நகைக் கடன், கல்விக் கடன், தனிநபர் கடன் என மக்களின் பல்வேறு தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு கடன்களும் கிடைக்கின்றன. உதாரணமாக, வீடு வாங்க வீட்டுக் கடன், கார்-பைக் வாங்க வாகனக் கடன், கல்விச் செலவுகளைச் சமாளிக்க கல்விக் கடன், சில பொதுவான செலவுகளைச் சமாளிக்க தனிநபர் கடனும் வழங்கப்படுகிறது.
Samayam Tamil loan


வீட்டுக் கடன் வாங்க வேண்டிய அவசியம் இருந்தால், நிறைய ஆவணங்கள் தேவைப்படும். மறுபுறம், வீட்டுக் கடன் என்பது மிக நீண்ட காலத்திற்கு எடுக்கப்படும் கடன் ஆகும். வீட்டுக் கடனில், EMI தொகையும் அதிகமாக இருக்கலாம். மேலும், நீண்ட காலத்திற்கு EMI செலுத்த வேண்டியிருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், ஒருவர் வீட்டுக் கடன் வாங்கியிருந்தால், தனிநபர் கடனும் வாங்கலாமா என்ற கேள்வியும் பல நேரங்களில் எழுகிறது.

வீட்டுக் கடன் வாங்கிய பிறகு ஒருவருக்கு தனிநபர் கடன் தேவைப்பட்டால், அவர் தனிநபர் கடனுக்கும் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், தனிநபர் கடனைப் பெறுவதற்கான சாத்தியக்கூறு, தனிநபர் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் உங்களிடம் உள்ளதா இல்லையா என்பதைப் பொறுத்தது. சம்பந்தப்பட்ட வங்கிதான் அதை முடிவு செய்யும்.

வீட்டுக் கடனைப் பெற்ற பிறகு நீங்கள் தனிநபர் கடன் வாங்கினால், உங்கள் திருப்பிச் செலுத்தும் திறன் வங்கியின் பார்வையில் சிறப்பாக இருந்தால், வங்கியும் உங்களுக்கு தனிநபர் கடனை வழங்கும். இருப்பினும், நீங்கள் தனிநபர் கடனை திருப்பிச் செலுத்த முடியாது என்று வங்கி நினைத்தால், அத்தகைய சூழ்நிலையில் அந்த வங்கி உங்களுக்கு கடன் வழங்காது.

வயதானவர்களுக்கு இனி பிரச்சினையே இல்லை.. கை நிறைய பணம் கிடைக்கும்!
உங்களுடைய சிபில் ஸ்கோர் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே உங்களுடைய தகுதியை வங்கிகள் தீர்மானிக்கும். நீங்கள் அதிகம் சம்பளம் வாங்குபவராக இருந்தாலும், பெரிய தொழிலதிபராக இருந்தாலும் உங்களுடைய கடன் வரலாறு மிக மோசமாக இருந்தால் உங்களுக்கு கடன் கிடைக்காது. எனவே இதுபோன்ற விஷயங்களை சரிபார்த்து நீங்கள் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

அதேபோல, தனிநபர் கடன் வாங்க முடிவுசெய்துவிட்டால் எந்த வங்கியில் வாங்கலாம் என்று ஆலோசிக்க வேண்டும். பல்வேறு வங்கிகளை ஒப்பிட்டுப் பார்த்து குறைந்த வட்டி இருக்கும் வங்கியில் கடன் வாங்கலாம். வட்டி மட்டுமே இங்கே முக்கியம் அல்ல; செயல்பாட்டுக் கட்டணம் எவ்வளவு, கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் என்ன, வேறு ஏதேனும் சலுகைகள் உள்ளனவா என்றெல்லாம் பார்த்துவிட்டு வாங்க வேண்டும்.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்