ஆப்நகரம்

வண்டி வாங்க போறீங்களா? அய்யோ பாவம்.. ரேட் எங்கயோ போகுது..!

கார், பைக் உள்ளிட்ட வாகனக் கடனுக்கான வட்டி உயரப் போகிறது.

Samayam Tamil 6 May 2022, 4:05 pm
சில நாட்களுக்கு முன்னர் அதிர்ச்சிதரும் விதமாக ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. ரெப்போ வட்டி விகிதம் 4.40 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டியை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil car sales


பொதுவாகவே பைக், கார் உள்ளிட்ட வாகனங்களை மக்கள் ஈஎம் ஐ முறையில்தான் வாங்குகிறார்கள். வாங்கும் சம்பளம் அன்றாடச் செலவுகளுக்கே போதுமானதாக இருப்பதால் பெரிய தொகையை சேமித்து வைத்து அதில் காரோ பைக்கோ வாங்குவது கஷ்டமான விஷயம்தான். அதற்குப் பதிலாக முன்பணம் குறைவாகச் செலுத்தியோ அல்லது செலுத்தாமலோ EMI வடிவில் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்திவிடலாம்.

வாகனங்கள் மட்டுமல்லாமல் மொபைல் போன், வீட்டு உபயோகப் பொருட்கள் என பல்வேறு பொருட்களை மக்கள் இப்போது EMI வசதியிலேயே அதிகமாக வாங்குகின்றனர். இந்நிலையில் தற்போது ரெப்போ வட்டி உயர்த்தப்பட்டுள்ளதால் வாகனக் கடன்களுக்கான வட்டியும் அதிகரிக்கும். இது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். இதுமட்டுமல்லாமல், நிறையப் பேர் வாகனக் கடன் வாங்குவதைத் தவிர்த்துவிடுவார்கள். இது வங்கிகளுக்கும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கும் பின்னடைவை ஏற்படுத்தலாம்.

உயரும் விலைவாசி.. எகிறும் EMI.. மக்களின் கண்ணீருக்கு யார் காரணம்?
இதுகுறித்து ஆட்டோமொபைல் டீலர்கல் கூட்டமைப்பின் தலைவர் வின்கேஷ் குலாத்தி கூறுகையில்,”வாகனக் கடன்களுக்கான வட்டி உயர்த்தப்பட்டால் கார் விற்பனையில் பெரிய பாதிப்பு ஏற்படாது. அதற்கு வாடிக்கையாளர்கள் வந்துகொண்டே இருப்பார்கள். ஆனால் இருசக்கர வாகன விற்பனையில் பின்னடைவு ஏற்படலாம். ஒருவேளை அடுத்த முறையும் வட்டி உயர்த்தப்பட்டால் கார் விற்பனையும் குறைய வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்