ஆப்நகரம்

கார்களை விற்க சலுகை வழங்கும் நிறுவனங்கள்!

ஊரடங்கால் வீழ்ச்சியடைந்துள்ள கார் விற்பனையை மீட்டெடுக்க ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சிறப்புச் சலுகைகளை அறிவித்து வருகின்றன.

Samayam Tamil 2 Jun 2020, 8:45 pm
இந்தியாவில் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு மண்டலங்களில் ஜூன் 30ஆம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது நாட்டு மக்கள் அனைவருக்கும் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அத்தியாவசியத் தேவைகள் தவிர்த்து இதர செலவுகளைப் பொதுமக்கள் குறைத்துக்கொண்டனர். வாகனம், கார், வீடு உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்கள் மீதான ஆர்வம் குறைந்துபோனது. குறிப்பாக வாகன விற்பனை முற்றிலும் முடங்கிவிட்டது. இதனால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கடும் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளன.
Samayam Tamil car


கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய ஆட்டோமொபைல் துறை நெருக்கடியான சூழலில் இயங்கிக் கொண்டிருந்த நிலையில், தற்போது கொரோனாவால் மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்லத் திரும்பி வருகிறது. எனவே வாடிக்கையாளர்களை அதிகமாக ஈர்த்து வாகன விற்பனையை மேம்படுத்தும் முயற்சியில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தற்போது இறங்கியுள்ளன. வாகனக் கடன்கள் எளிதாகக் கிடைக்க வேண்டும் என்பதற்காக வங்கிகளுடன் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து சலுகைத் திட்டங்களை அறிவித்துள்ளன.

1.5 கோடி விவசாயிகளுக்குக் கடன் அட்டைகள்!

ரிசர்வ் வங்கியும் ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளதால் வங்கிகளுக்கும் அதிகமாகக் கடன் வழங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குறைந்த வட்டியில் வாகனக் கடன் வழங்க வங்கிகளும் முன்வந்துள்ளன. வங்கிகள் தரப்பிலிருந்தும் ஈஎம்ஐ சலுகைகள் வழங்கப்படுகிறது. மாருதி சுஸுகி, ஹூண்டாய், மெர்சிடஸ் பென்ஸ் ஆகிய நிறுவனங்கள் சிறப்புத் திட்டங்களை அறிவித்துள்ளன. இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி சமீபத்தில் ஈஎம் திட்டம் ஒன்றை அறிவித்தது. இதன்படி, ரூ.899 தொகையில் வாடிக்கையாளர்கள் கார் வாங்க முடியும்.

கேப் விடாமல் ஊழியர்களை துரத்தும் நிறுவனங்கள்... இன்று பலிகிடா யார்?

அதேபோல, ஹூண்டாய் நிறுவனமும் சென்ற மே மாதத் தொடக்கத்தில் கார் வாங்க விரும்புபவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், பொருளாதார ரீதியாக ஆதரவளிக்கும் விதமாகவும் சிறப்புத் திட்டம் ஒன்றை அறிவித்தது. அதாவது, புதிதாக கார் வாங்கும் ஒருவர், ஊரடங்கு சமயத்தில் வேலையை இழந்தவராக இருந்தால் அவருக்கு மூன்று மாத ஈ.எம்.ஐ. தொகையினை ஹூண்டாய் நிறுவனமே செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. வங்கிகள் தரப்பிலிருந்தும் வாடிக்கையாளர்களை ஈர்க்க சிறப்புக் கடன் திட்டங்களை அறிவிக்கத் தொடங்கியுள்ளன. இதனால் வங்கிகளுக்கு வாராக் கடன் பிரச்சினை ஏற்படும் எனவும் வங்கிகள் தரப்பில் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்