ஆப்நகரம்

கார் வாங்க போறிங்களா? அப்போ உங்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

கார் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு இப்படியொரு அதிர்ச்சி தகவலா!

Samayam Tamil 11 Dec 2021, 6:27 pm
பல்வேறு கார் நிறுவனங்கள் தொடர்ந்து கார் விலையை உயர்த்தி வருகின்றன. மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், ரெனோ, மெர்சிடிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கெனவே கார் விலையை உயர்த்துவதாக அறிவித்துவிட்டன. இதைத்தொடர்ந்து இன்னும் அடுத்தடுத்து வேறு நிறுவனங்களும் கார் விலையை உயர்த்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Samayam Tamil cars


கார் உற்பத்திக்கு தேவையான உள்ளீட்டுப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் கார் விலையும் உயர்த்தப்படுவதாக நிறுவனங்கள் கூறுகின்றன. இந்நிலையில், 2022ஆம் ஆண்டிலும் கார்களின் விலை தொடர்ந்து உயரும் என Grant Thornton Bharat வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் சரக்குகளின் விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் விளைவாக கார்களின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. புதிய கார்கள் மட்டுமல்லாமல் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட கார்களும் அதிக விலைக்கு விற்கப்படுவதாக இந்த அறிக்கை கூறுகிறது.

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. வெளியானது சூப்பர் தகவல்!
அடுத்த ஆண்டிலும் கார்களின் விலை தொடர்ந்து உயர்வாகவே இருக்கும் எனவும், 2023ஆம் ஆண்டு வரை விலை உயர்வில் இருந்து நிவாரணம் கிடைக்க வாய்ப்பில்லை எனவும் இந்த அறிக்கை கூறுகிறது. அடுத்த ஆண்டும் கார்களின் விலை உயர்வாக இருக்கும் என்ற தகவல், கார் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்