ஆப்நகரம்

Cars24: 600 பேர் வேலைக்கு வேட்டு.. காரணம் என்ன?

கார்ஸ்24 நிறுவனத்திலிருந்து 600 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 19 May 2022, 4:29 pm
இந்தியாவில் இப்போது பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது. அதிகம் செலவு செய்து புதிய காரை வாங்குவதை விட, ஏற்கெனவே பயன்படுத்திய காராக இருந்தாலும் பரவாயில்லை, நல்ல தரமான காராக இருந்தால் போதும் என்று குறைந்த விலைக்கு வாங்குவோர் அதிகம். அந்த வகையில் இதுபோன்ற பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான தேவை இப்போது அதிகமாக இருக்கிறது. இந்த கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் இப்போது அதிகரித்துவிட்டது.
Samayam Tamil cars24


இவ்வாறான பயன்படுத்தப்பட்ட கார்களை விற்பனை செய்யும் மின்னணு விற்பனை தளமான கார்ஸ்24 (cars24) இத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிறுவனம் இந்தியா மட்டுமல்லாமல் மத்திய கிழக்கு, ஆஸ்திரேலியா, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நல்ல தொழில் வளர்ச்சியைக் கொண்டுள்ளது. இந்நிலையில் அதிர்ச்சி தரும் விதமாக, 600 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.

Petrol price in chennai (19 may 2022):இன்னைக்கு பெட்ரோல் விலை என்ன தெரியுமா?
பணிநீக்கத்துக்கான காரணம் வேறு எதுவும் இல்லை எனவும், இது வழக்கமான நடவடிக்கைதான் எனவும் கார்ஸ்24 நிறுவனம் தெரிவித்துள்ளது. பொதுவாக, நிறுவனத்தின் செலவுகளைக் குறைப்பதற்காக இதுபோல ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் அந்த நோக்கத்துக்காக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவில்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ளும் நடவடிக்கைதான் எனவும் விளக்கம் தெரிவித்துள்ளது.

ஊழியர்களின் பணித் தகுதி, அவர்களின் திறன், வேலைபார்க்கும் விதம், முன்னேற்றம் போன்ற காரணிகளை அடிப்படையாக வைத்து பணிநீக்கம் செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்