ஆப்நகரம்

நிரவ் மோடி மீது ரூ.52 கோடி வரி ஏய்ப்பு வழக்கு

சுங்க வரித்துறையை ஏமாற்றி ரூ.890 கோடி மதிப்பிலான வைரம் மற்றும் முத்துக்களை நிரவ் மோடி கடத்தியதாக வருவாய்த்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

Samayam Tamil 21 Mar 2018, 2:30 am
சுங்க வரித்துறையை ஏமாற்றி ரூ.890 கோடி மதிப்பிலான வைரம் மற்றும் முத்துக்களை நிரவ் மோடி கடத்தியதாக வருவாய்த்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
Samayam Tamil nirav-modi-store1


பஞ்சாப் நேஷனல் வங்கி இந்தியாவின் 2வது பெரிய அரசு வங்கி ஆகும். இதில் வைர வியாபாரி நிரவ் மோடி ரூ.12,000 கோடிக்கு மேல் முறைகேடு செய்திருப்பது அண்மையில் அம்பலமானது. இதனைத் தொடர்ந்து ஓரியண்டல் வங்கி, ஆக்ஸில் வங்கி போன்ற பல வங்கிகளில் நடைபெற்ற முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

இந்நிலையில், தலைமறைவாக உள்ள நிரவ் மோடிக்குச் சொந்தமாக சூரத்தில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலம் மூலம் ரூ.890 கோடி மதிப்பிலான வைரங்களும் முத்துக்களும் சுங்க வரித்துறையை ஏமாற்றி கடத்திச்செல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதன் மூலம் ரூ.52 கோடி சுங்க வரி ஏய்ப்பு நடைபெற்றிருக்கிறது என்று வருவாய்த்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்