ஆப்நகரம்

வருமான வரி: 18 லட்சம் பேருக்கு ரீஃபண்ட்!

வருமான வரி செலுத்தியோருக்கு ரீஃபண்ட் தொகையாக ரூ.37,050 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

Samayam Tamil 8 Jul 2021, 6:51 pm
இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 2020 மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இக்காலத்தில் நாட்டு மக்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு சலுகை அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டது. ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரச் சலுகைகள் அறிவிக்கப்பட்டதோடு, வங்கிக் கடன் செலுத்துவது, வரி செலுத்துவது போன்றவற்றுக்கான கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டது. அதோடு, வரி செலுத்தியோருக்குத் திரும்பி வரவேண்டிய ரீஃபண்ட் தொகையையும் வருமான வரித் துறை வேகமாக வழங்கி வருகிறது.
Samayam Tamil it refund


அதன்படி, இந்த ஆண்டின் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி வரையில் மொத்தம் 17.92 லட்சம் பேருக்கு ரீஃபண்ட் தொகையாக ரூ.37,050 கோடியை வழங்கியுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. இதில் தனிநபர் வருமான வரியாக மொத்தம் 16.89 லட்சம் பேருக்கு ரூ.10,408 கோடி ரீஃபண்ட் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, கார்பரேட் வரி பிரிவின் கீழ் 1.03 லட்சம் பேருக்கு ரூ.26,642 கோடியும் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

இந்த கார்டு இருந்தால் போதும்.. சலுகைகளை அள்ளிட்டு போகலாம்!
இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான நான்கு மாதங்களில் மட்டும் வருமான வரித் துறை ரூ.17,061 கோடி ரீஃபண்ட் தொகையை 13 லட்சம் பேருக்கு வழங்கியிருந்தது. இதில் தனிநபர் வருமான வரியாக ரூ.5,575 கோடியை 12.71 லட்சம் பேருக்கும், கார்பரேட் வரியாக ரூ.11,486 கோடியை 29,592 பேருக்கும் வழங்கியிருந்தது. கொரோனா பாதிப்பைக் கருத்தில்கொண்டே ரீஃபண்ட் தொகையை விரைந்து வழங்கி வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்