ஆப்நகரம்

வருமான வரி: 21 லட்சம் பேருக்கு ரீஃபண்ட் பணம்!

வருமான வரி செலுத்திய 21 லட்சம் பேருக்கு ரீஃபண்ட் தொகையாக ரூ.45,000 கோடி வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 7 Aug 2021, 9:42 pm
இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 2020 மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இக்காலத்தில் நாட்டு மக்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு சலுகை அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டது. ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரச் சலுகைகள் அறிவிக்கப்பட்டதோடு, வங்கிக் கடன் செலுத்துவது, வரி செலுத்துவது போன்றவற்றுக்கான கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டது. அதோடு, வரி செலுத்தியோருக்குத் திரும்பி வரவேண்டிய ரீஃபண்ட் தொகையையும் வருமான வரித் துறை வேகமாக வழங்கி வருகிறது.
Samayam Tamil refund


அதன்படி, இந்த ஆண்டின் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரையில் மொத்தம் 21.32 லட்சம் பேருக்கு ரீஃபண்ட் தொகையாக ரூ.45,897 கோடியை வழங்கியுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. இதில் தனிநபர் வருமான வரியாக மொத்தம் 20.12 லட்சம் பேருக்கு ரூ.13,694 கோடி ரீஃபண்ட் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, கார்பரேட் வரி பிரிவின் கீழ் 1.19 லட்சம் பேருக்கு ரூ.32,203 கோடியும் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் தனது ட்விட்டர் பதிவில் மேற்கூறிய விவரங்களை வழங்கியுள்ளது. முன்னதாக ஜூலை 30ஆம் தேதி வருமான வரித் துறை வெளியிட்டிருந்த அறிவிப்பில் ஏப்ரல் 1 முதல் ஜூலை 26 வரையில் வருமான வரி ரீஃபண்ட் தொகையாக ரூ.43,991 கோடியை வழங்கியுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்