ஆப்நகரம்

வரி செலுத்திய 89 லட்சம் பேருக்கு ரீஃபண்ட்... உங்களுக்கு கிடைத்ததா?

வருமான வரி செலுத்திய 89 லட்சம் பேருக்கு ரீஃபண்ட் தொகையாக ரூ.1.45 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 11 Dec 2020, 8:07 pm
இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இக்காலத்தில் நாட்டு மக்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு சலுகை அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டது. ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரச் சலுகைகள் அறிவிக்கப்பட்டதோடு, வங்கிக் கடன் செலுத்துவது, வரி செலுத்துவது போன்றவற்றுக்கான கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டது. அதோடு, வரி செலுத்தியோருக்குத் திரும்பி வரவேண்டிய ரீஃபண்ட் தொகையையும் வருமான வரித் துறை வேகமாக வழங்கி வருகிறது.
Samayam Tamil refund


அதன்படி, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 8ஆம் தேதி வரையில் மொத்தம் 89.29 லட்சம் பேருக்கு ரீஃபண்ட் தொகையாக ரூ.1,45,619 கோடியை வழங்கியுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நவம்பர் 24ஆம் தேதி வரையில் மொத்தம் 41.25 லட்சம் பேருக்கு ரீஃபண்ட் தொகையாக ரூ.1,36,962 கோடி வழங்கப்பட்டிருந்தது. கொரோனா பாதிப்பைக் கருத்தில்கொண்டே ரீஃபண்ட் தொகையை விரைந்து வழங்கி வருவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதம் ரூ.36,000 பென்சன்: எல்ஐசியின் அற்புதமான திட்டம்!

கொரோனா பெருந்தொற்று காரணமாக வரி செலுத்துவோர் வருமான வரி சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகளை மேற்கொள்வதில் சவால்களைச் சந்தித்து வருவதால் கடந்த 2020 மார்ச் 31ஆம் தேதி வரி விதிப்பு மற்றும் பிற சட்டங்களுக்கான அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி பல்வேறு விஷயங்களில் கால வரம்பு நீட்டிக்கப்பட்டு வருகிறது. 2019-20 நிதியாண்டுக்கான வருமான வரி ரிட்டன்களைச் செலுத்துவதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 வரையில் நீட்டிக்கப்பட்டது.


கடந்த ஜூன் 24ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், 2019-20 நிதியாண்டுக்கான அனைத்து விதமான வரி செலுத்துவோருக்கான காலக்கெடு 2020 நவம்பர் 30 வரை நீடிக்கப்பட்டது. இதன்படி, 2020ஆம் ஆண்டில் ஜூலை 31, அக்டோபர் 31 ஆகிய தேதிகளில் தாக்கல் செய்யப்பட வேண்டிய வருமான வரியை 2020 நவம்பர் 30ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டிய தேவை இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்தத் தேதிக்குள் வரித் தாக்கல் செய்வதில் பலருக்கு சிரமம் இருப்பதைக் கருத்தில் கொண்டு, டிசம்பர் 31ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்