ஆப்நகரம்

இந்தியாவின் மிகப்பெரிய வங்கி மோசடி.. குஜராத் நிறுவனம் மீது சிபிஐ வழக்கு!

இந்தியாவின் மிகப்பெரிய வங்கி மோசடி விவகாரத்தில் குஜராத்தை சேர்ந்த ஏபிஜி ஷிப்யார்ட் நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு.

Samayam Tamil 13 Feb 2022, 5:38 pm
குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஏபிஜி ஷிப்யார்ட் என்ற நிறுவனம் 22000 கோடி ரூபாய்க்கு மேல் வங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
Samayam Tamil ABG Shipyard


எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளிடம் 22,842 கோடி ருபாய் மதிப்புள்ள வங்கி மோசடியில் ஈடுபட்டதாக ஏபிஜி ஷிப்யார்ட் நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரிஷி கமலேஷ் அகர்வால் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

இவ்விவகாரத்தில் ஏபிஜி ஷிப்யார்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரிஷி கமலேஷ் அகர்வால் மட்டுமல்லாமல் தலைமை இயக்குநர் சந்தானம் முத்துசாமி, இயக்குநர்கள் அஷ்வினி குமார், சுஷில் குமார் அகர்வால், ரவி விமல் நிவேதியா ஆகியோர் மீதும் குற்றவியல் சதி, மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

100 நாள் வேலைத் திட்டத்திற்கு செக்.. மத்திய அரசு எடுத்த முடிவு!
இவ்விவகாரத்தில் ஏபிஜி இண்டர்நேஷனல் எனப்படும் மற்றொரு நிறுவனம் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் இவ்வழக்கில் தொடர்புடைய 13 இடங்களில் இன்று சிபிஐ சோதனை நடத்தியுள்ளது.

எஸ்பிஐ, ஐசிஐசிஐ உள்ளிட்ட 28 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து ஏபிஜி ஷிப்யார்ட் சுமார் 22842 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதில் எஸ்பிஐ வங்கியிடம் மட்டும் 2468.51 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது ஏபிஜி ஷிப்யார்ட்.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் கூட்டு சேர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், பணத்தை திசைதிருப்பியுள்ளதாகவும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளதாகவும் தணிக்கை அறிக்கை கூறுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்