வங்கிக்கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றிவருபவது குறித்த வழக்குகள் தொடர்பாக இன்று ஒரே நாளில் 50 இடங்களில் சிபிஐ சிறப்பு சோதனை மேற்கொள்கிறது. வங்கிகளில் கடன் பெற்ற பல்வேறு நிறுவனங்கள் அதனை திருப்பி செலுத்தாமல் டிமிக்கி கொடுக்கின்றன. இதனால் அவை வங்கி மோசடி வழக்கில் சிக்கியுள்ளன. இந்நிலையில் வங்கி மோசடி தொடர்பான புகார்களில் சி.பி.ஐ. இன்று அதிரடி சோதனையை நடத்துகிறது.
12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 18 நகரங்களில் சிபிஐ அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். மொத்தம் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சிபிஐ சோதனையை நடப்பதாக தெரியவந்துள்ளது.
இதைப் பற்றி சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் கூறுகையில், “வங்கி மோசடி தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள், வங்கி அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு உள்ளது. இந்த வங்கி மோசடி தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 14 வழக்குகள் தொடர்பாக சோதனை மேற்கொள்ளப்படுகிறது.” என்று குறிப்பிட்டார்.
டெல்லி, மும்பை, லூதியானா, தானே, வல்சாத், புனே, பழனி, கயா, குர்கான், சண்டிகர், போபால், சூரத் மற்றும் கோலார் உள்ளிட்ட நகரங்களில் சோதனை நடக்கிறது.
அண்மைத் தகவல்களின்படி சிபிஐ அதிகாரிகள் 640 கோடி ரூபாய் வரை பறிமுதல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 18 நகரங்களில் சிபிஐ அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். மொத்தம் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சிபிஐ சோதனையை நடப்பதாக தெரியவந்துள்ளது.
இதைப் பற்றி சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் கூறுகையில், “வங்கி மோசடி தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள், வங்கி அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு உள்ளது. இந்த வங்கி மோசடி தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 14 வழக்குகள் தொடர்பாக சோதனை மேற்கொள்ளப்படுகிறது.” என்று குறிப்பிட்டார்.
டெல்லி, மும்பை, லூதியானா, தானே, வல்சாத், புனே, பழனி, கயா, குர்கான், சண்டிகர், போபால், சூரத் மற்றும் கோலார் உள்ளிட்ட நகரங்களில் சோதனை நடக்கிறது.
அண்மைத் தகவல்களின்படி சிபிஐ அதிகாரிகள் 640 கோடி ரூபாய் வரை பறிமுதல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.