ஆப்நகரம்

பொருளாதாரச் சலுகை... மத்திய அரசுக்கு அட்வைஸ்!

பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க இன்னொரு பொருளாதாரச் சலுகையை அறிவிக்கலாம் என தலைமைப் பொருளாதார ஆலோசகர் சுப்ரமணியன் கூறியுள்ளார்.

Samayam Tamil 20 Jun 2021, 9:35 pm
சென்ற ஆண்டில் கொரோனா வைரஸ் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த மார்ச் 25 முதல் மே 17 வரையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பெரும் பொருளாதாரச் சரிவு ஏற்பட்ட நிலையில், அதை மீட்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியது. அப்போது நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதாரச் சலுகையை அறிவித்தார். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறையை மையமாகக் கொண்டு பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
Samayam Tamil CEA


இந்நிலையில் தற்போது கொரோனா இரண்டாம் அலையால் பாதிப்புகள் அதிகமாக இருப்பதால் மீண்டும் ஒரு பொருளாதாரச் சலுகை அறிவிக்கப்படுமா என்ற பேச்சு பரவலாக உள்ளது. கொரோனா ஊரடங்கால் அரசின் வரி வருவாய் குறைந்து செலவுகள் அதிகரித்துள்ளதால் பொருளாதாரச் சலுகைகளை அறிவிப்பதில் அரசுக்கும் நெருக்கடி உள்ளது. ஆனால் பல்வேறு தரப்பிலிருந்து இன்னொரு பொருளாதாரச் சலுகை அறிவிக்கப்பட வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளது. தேவைப்பட்டால் இன்னொரு பொருளாதாரச் சலுகை அறிவிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் சமீபத்தில் கூறியிருந்தார்.

PAN card: வங்கிகள் எச்சரிக்கை... இதைச் செய்யாவிட்டால் ஆபத்து!
இந்நிலையில், துவண்டுபோன பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க சிறப்புச் சலுகை அறிவிக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகரான கே.வி.சுப்ரமணியன் ஆலோசனை தெரிவித்துள்ளார். அவரது மதிப்பீட்டின்படி, ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான சலுகை அறிவிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதை வைத்து ஏப்ரல் - மே மாதங்களில் கொரோனா பாதிப்பால் நலிந்துபோன இந்தியப் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்