ஆப்நகரம்

அதிக வருமானம் வேணுமா? அப்போ தடுப்பூசி போடணும்.. சூப்பர் சலுகை!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு அதிக வட்டி வழங்கப்படும் என சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

Samayam Tamil 13 Apr 2021, 8:53 pm

ஹைலைட்ஸ்:

  • கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் அதிக வட்டி
  • சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி அறிவிப்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil cash
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஒரு சிறப்பு டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், கொரோனா தடுப்பூசி போட்டுகொண்ட நபர்களுக்கு அதிக வட்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதானிக்கு மியான்மர் ராணுவத்துடன் தொடர்பு? பங்கு சந்தையில் இருந்து நீக்கம்!
இந்தியா முழுவதும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மக்களை தடுப்பூசி போட்டுக்குள்ள ஊக்குவிப்பதற்காக அரசும், சில தனியார் நிறுவனங்களும் சலுகை போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

இந்த வரிசையில், அரசு வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (Central Bank of India) புதிய டெபாசிட் திட்டத்தை அறிவுறுத்துள்ளது. இத்திட்டத்துக்கு Immune India Deposit Scheme என பெயரிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் முதலீடு செய்வோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தால் கூடுதலாக 0.25% வட்டி வழங்கப்படும். இத்திட்டத்தின் மெச்சூரிட்டி காலம் 1111 நாட்கள். சீனியர் சிட்டிசனாக இருந்தால் இன்னும் கூடுதல் வட்டி கிடைக்கும்.

தங்க நகைக்கு ஹால்மார்க்: ஜூன் 1 முதல் கட்டாயம்!
எனவே, பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டு சலுகையை பெற்றுக்கொள்ளும்படி சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது. இது குறுகிய கால சலுகை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்