ஆப்நகரம்

நீங்களே இப்படி பண்ணலாமா.. ஃப்ளிப்கார்ட் நிறுவனத்துக்கு 1 லட்சம் அபராதம்!

தரக்குறைவான பிரஷர் குக்கர்களை விற்பனை செய்ததற்காக ஃப்ளிப்கார்ட் நிறுவனத்துக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்.

Samayam Tamil 17 Aug 2022, 6:45 pm
தரக்குறைவான பிரஷர் குக்கர்களை விற்பனை செய்ததற்காக ஃப்ளிப்கார்ட் நிறுவனத்துக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
Samayam Tamil flipkart


தரக்குறைவான பிரஷர் குக்கர்களை விற்பனை செய்ததற்காகவும், நுகர்வோர் உரிமைகளை மீறியதற்காகவும் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் நிதி காரே தெரிவித்துள்ளார்.

ஃப்ளிப்கார்ட் நிறுவனம் 598 தரக்குறைவான பிரஷர் குக்கர்களை விற்பனை செய்துள்ளதாக தெரிகிறது. எனவே, இந்த 598 பிரஷர் குக்கர்களையும் வாங்கிய நபர்களுக்கு தகவல் தெரிவித்து, பிரஷர் குக்கர்களை திரும்பப் பெற்று, பணத்தை அவர்களிடம் திருப்பிச் செலுத்தும்படி நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

LIC பாலிசிதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இந்த வாய்ப்பை விட்றாதிங்க!
இதுகுறித்து 45 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் ஃப்ளிப்கார்ட்டுக்கு நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தரக்குறைவான பொருட்களை பயன்படுத்துவதால் பயனாளிகளுக்கு காயம் அல்லது வேறு ஏதேனும் பாதிப்பு ஏற்படலாம். எனவே, தரக்குறைவான பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கண்காணித்து வருகிறது.

மேற்கூறிய தரக்குறைவான பிரஷர் குக்கர்களை விற்பனை செய்ததன் வாயிலாக ஃப்ளிப்கார்ட் நிறுவனம் 1,84,263 ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஃப்ளிப்கார்ட் நிறுவனத்துக்கு நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்