ஆப்நகரம்

ஆயுஷ்மான் பாரத் திட்டம்.. மத்திய அரசு புதிய சாதனை!

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 5 கோடி பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 31 May 2023, 8:12 pm
பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் வெற்றிகரமாக 5 கோடி பேருக்கு மருத்துவமனைகளில் ரூ. 61,501 கோடி மதிப்பிலான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது இந்தத் திட்டத்தின் மைல்கல் சாதனை என்றும், தேசிய சுகாதார ஆணையத்தின் சார்பில் அமல்படுத்தப்பட்ட சிறப்புமிக்க இந்தத் திட்டத்தின் கீழ் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான சுகாதாரக் காப்பீடு வழங்கப்படுவதாகவும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Samayam Tamil ayushman


இந்த சாதனை குறித்து தேசிய சுகாதார ஆணையத்தின் முதன்மை செயல் அதிகாரி கூறுகையில், உலகளாவிய சுகாதாரக் காப்பீட்டு இலக்கை அடைய ஏதுவாக பிரதமரின் ஆயுஷ்மான் பாரத்-மக்கள் ஆரோக்கியத் திட்டம் கடந்த ஐந்து ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார். ஏழை மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் பல குடும்பங்களின் மருத்துவச் சிகிச்சைக்கான செலவை குறைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நடப்பாண்டு 9.28 கோடி பேருக்கு ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். டெல்லி, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் தவிர பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 23.39 கோடி பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் அட்டை வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்தத் திட்டத்தின் கீழ் புற்றுநோய், சிறுநீரகம் சார்ந்த நோய்கள் போன்றவற்றிக்கான சிகிச்சையுடன், எலும்பு சார்ந்த சிகிச்சைகள், அவசரகால சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. ஆயுஷ்மான் பாரத் திட்டம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அனைத்து மாவட்டங்களிலும் இலக்கு வைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளையும் உள்ளடக்கும் நோக்கத்துடன் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்