ஆப்நகரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. வெளியான சூப்பர் அறிவிப்பு!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 13 சதவீதம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 16 Apr 2022, 2:33 pm
லட்சக்கணக்கான அரசு ஊழியர்களுக்கும் பென்சனர்களுக்கும் மகிழ்ச்சி தரும் வகையில் மிக முக்கியமான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR)ஆகியவற்றை உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது அனைவருக்கும் பொருந்தாது. ஐந்தாவது ஊதிய கமிஷன் மற்றும் ஆறாவது ஊதிய கமிஷன் கீழ் வரும் மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே இந்த உயர்வு பொருந்தும்.
Samayam Tamil DA hike


தற்போதைய அறிவிப்பின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 13 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. உயர்வுக்குப் பிறகு 381 சதவீதத்தில் அகவிலைப்படி இருக்கும். இதற்கு முன்னர் அகவிலைப்படி 368 சதவீதமாக இருந்தது. ஐந்தாவது ஊதிய கமிஷன் பரிந்துரையின் பேரில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதேபோல, ஆறாவது ஊதிய கமிஷன் கீழ் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஏற்கெனவே இருந்த 196 சதவீதத்திலிருந்து 203 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இந்த உயர்வானது 2022 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை செலவீனங்கள் துறை வெளியிட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. அடுத்தடுத்து வரும் சர்பிரைஸ்!
சமீபத்தில்தான் ஏழாவது ஊதிய கமிஷன் பரிந்துரையின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஐந்தாவது மற்றும் ஆறாவது ஊதிய கமிஷன் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது மத்திய அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வைத் தொடர்ந்து மாநில அரசுகளும் ஒவ்வொன்றாக தங்களது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி வருகின்றன. கடைசியாக ஜார்கண்ட் மாநிலம் உயர்த்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்