ஆப்நகரம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. 18 மாத நிலுவைத் தொகை விரைவில்?

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 16 Aug 2022, 8:33 am
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரப்போகிறது. அவர்களுக்கான 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை (18 மாத பாக்கி) தொடர்பான அறிவிப்பு வெளியாகவுள்ளது. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, இப்போது இந்த பிரச்சினைக்கு தீர்வு காண பிரதமர் நரேந்திர மோடியை ஓய்வூதியதாரர்கள் கேட்டுள்ளனர். இதற்கான குறிப்பாணையையும் ஓய்வூதியர் அமைப்பு சமர்ப்பித்துள்ளது.
Samayam Tamil DA


இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி விரைவில் முடிவெடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது நடந்தால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கணக்கில் பெரிய தொகை டெபாசிட் செய்யப்படும். இந்த 18 மாத நிலுவைத் தொகை குறித்த கோரிக்கையில் ஊழியர்கள் உறுதியாக இருக்கின்றனர்.

அரசு ஊழியர்களில் நிலை-1 பிரிவு ஊழியர்களின் நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை உள்ளது. அதேசமயம், லெவல்-13 அல்லது லெவல்-14 ஆகியவற்றுக்கு நிலுவைத் தொகை ரூ.1,44,200 ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
இந்த விஷயத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று பாரதி பென்ஷனர்ஸ் மஞ்ச் (பிஎம்எஸ்) பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 18 மாத நிலுவைத் தொகை மிகப் பெரிய தொகை என்றும், இதுவே தங்களின் வாழ்வாதாரம் என்றும் ஓய்வூதியதாரர்கள் கூறுகின்றனர்.

2020 ஜனவரி 1 முதல் 2021 ஜூன் 30 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள DA/DR நிலுவைத் தொகையை நிதியமைச்சகம் வழங்க வேண்டும் என்று ஓய்வூதியதாரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். DA/DR நிறுத்தப்பட்டபோது, சில்லறை பணவீக்கம் கடுமையாக உயர்ந்தது என்றும், பெட்ரோல் மற்றும் டீசல், சமையல் எண்ணெய் மற்றும் பருப்பு வகைகளின் விலையும் உச்சத்தில் இருந்ததாகவும் ஓய்வூதியதாரர்கள் வாதிடுகின்றனர்.

இதுபோன்ற சூழ்நிலையில், இந்த நிலுவைத் தொகையை அரசு நிறுத்தக் கூடாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்