ஆப்நகரம்

அரசு ஊழியர்களுக்கு கடைசி வாய்ப்பு.. உடனே இதை வாங்கிடுங்க!

அரசு ஊழியர்கள் கல்விப் படித் தொகை பெறுவதற்கு நெருங்கும் கடைசி தேதி.

Samayam Tamil 2 Mar 2022, 1:15 pm
மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. எனினும், கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளுக்கான கல்வி படித் தொகையை (Children Education Allowance) பெற முடியாமல் இருந்தது.
Samayam Tamil cash


மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளுக்கான கல்விப் படித் தொகையை கிளைம் செய்ய மார்ச் 31ஆம் தேதி கடைசி நாளாகும். கல்விப் படித் தொகையை கிளைம் செய்ய குழந்தையின் பள்ளி சான்றிதழை பெற வேண்டும். அதில், உங்கள் குழந்தை அந்தப் பள்ளியில் படிப்பதாக பள்ளி நிர்வாகம் சான்றிதழ் அளிக்க வேண்டும்.

இதுபோக குழந்தையின் ரிப்போர்ட் கார்டு, கட்டண ரசீது ஆகிய ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு குழந்தை கல்விப் படித் தொகை மாதம் 2250 ரூபாய் வழங்கப்படுகிறது. இரண்டு குழந்தைகள் வரை மொத்தம் 4500 ரூபாய் என படித் தொகை பெறலாம்.

அகவிலைப்படி நிலுவைத்தொகைக்கு பிரச்சினை.. கடுப்பில் அரசு ஊழியர்கள்!
குழந்தைகளுக்கான கல்விப் படித் தொகையை பெறுவதற்கு கடைசி நாள் இம்மாத இறுதியுடன் (மார்ச் 31) முடிவடைகிறது. எனவே, கடைசி நாளுக்குள் ஆவணங்களை சமர்ப்பித்தால் சம்பளத்துடன் கல்விப் படித் தொகையும் சேர்த்து கிடைக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்