ஆப்நகரம்

அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்? கால்குலேசன் இதுதான்!

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்த கணக்கீடு...

Samayam Tamil 23 Mar 2022, 10:29 am
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நற்செய்தி வந்துள்ளது. விரைவில் அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் காரணியை உயர்த்தலாம் எனவும் அது தொடர்பான அறிவிப்பை மத்திய வெளியிடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.18,000லிருந்து ரூ.26,000 ஆக உயர்த்தப்படும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றன. சம்பளம் கணக்கிடும் ஃபிட்மென்ட் காரணியை 2.57 மடங்கில் இருந்து 3.68 மடங்காக உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை உள்ளது.
Samayam Tamil 7th pay


மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் காரணியை உயர்த்தி அறிவித்தால், அவர்களின் சம்பளம் வெகுவாக உயரும். ஃபிட்மென்ட் காரணியை அதிகரிப்பது குறைந்தபட்ச ஊதியத்தையும் அதிகரிக்கும். தற்போது, 2.57 சதவீதத்தை அடிப்படையாக கொண்டு, ஃபிட்மென்ட் காரணியின் கீழ் ஊழியர்கள் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இது 3.68 சதவீதமாக உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் 8,000 ரூபாய் அதிகரிக்கும். அதாவது மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000லிருந்து ரூ.26,000 ஆக உயர்ந்துவிடும்.

அரசு வேலை என்ற பெயரில் மோசடி.. உஷாரய்யா உஷாரு!
ஃபிட்மென்ட் காரணி குறித்த கணக்கீடு:

தற்போது ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 என்றால், அலோவன்ஸ் தவிர்த்து, 2.57 ஃபிட்மென்ட் காரணியின்படி ரூ.46,260 கிடைக்கும். அதாவது 18,000 X 2.57 = 46,260.

அதேபோல, ஃபிட்மென்ட் காரணி 3.68 ஆக இருந்தால் ஊழியர்களின் சம்பளம் ரூ.95,680 ஆக உயரும். அதாவது 26,000 X 3.68 = 95,680.

சம்பள உயர்வு தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று ஊழியர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். விரைவில் நல்ல செய்தி வருமா..?

அடுத்த செய்தி

டிரெண்டிங்