ஆப்நகரம்

போட்டோ எடுத்து அனுப்பினால் 500 ரூபாய் பரிசு.. மத்திய அரசின் புதிய திட்டம்?

தவறான இடங்களில் வாகனங்கள் பார்க்கிங் செய்யப்பட்டதை போட்டோ எடுத்து அனுப்பினால் 500 ரூபாய் சன்மானம் வழங்க அரசு ஆலோசனை.

Samayam Tamil 17 Jun 2022, 12:35 pm
சாலைப் போக்குவரத்து அமைச்சகம் சார்பாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலனுக்காக நிறைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாலைகள் அமைப்பு, சாலைகள் சீரமைப்பு, சுங்கச் சாவடிகளில் ஃபாஸ்டாக் முறை, பார்க்கிங் வசதி போன்ற நடவடிக்கைகள் ஏராளம். சாலை விபத்துகளைத் தடுக்கவும் போக்குவரத்து அமைச்சகம் நிறைய திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், பார்க்கிங் விஷயத்தில் புதிய திட்டம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil no parking


அதாவது சாலையோரங்களிலும் தெருக்களிலும் தேவையற்ற இடங்களில் அல்லது அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதையும், அதன் மூலம் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், விபத்து போன்றவற்றைக் கட்டுப்படுத்தவும் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முடிவுசெய்துள்ளது. தவறான இடங்களில் நிறையப் பேர் வாகனங்களை பார்க்கிங் செய்துவிட்டுச் செல்வதைத் தடுக்க, தவறான பார்க்கிங் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கும் சன்மானம் வழங்கத் திட்டமிட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

சமயம் தமிழ் செய்திகளை உடனுக்குடன் படிக்க இங்கே கிளிக் செய்யவும்!

அதாவது, தவறான இடங்களில் வாகனங்கள் பார்க்கிங் செய்யப்பட்டதை பொதுமக்கள் யாராவது பார்த்தால் அதை போட்டோ எடுத்து அரசுக்கு அனுப்பினால் அவர்களுக்கு 500 ரூபாய் ரிவார்டு வழங்கப்படும். இதுகுறித்து அரசு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அதற்கான வரைவு விரைவில் தயாரிக்கப்பட்டு அது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் முறையற்ற பார்க்கிங் கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்