ஆப்நகரம்

பணத்தட்டுப்பாடு எதிரொலி; ரூ.500 நோட்டை 5 மடங்கு கூடுதலாக அச்சிட முடிவு!

பணத்தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில், ரூ.500 நோட்டை கூடுதலாக அச்சிடப்படவுள்ளது.

Samayam Tamil 17 Apr 2018, 5:11 pm
டெல்லி: பணத்தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில், ரூ.500 நோட்டை கூடுதலாக அச்சிடப்படவுள்ளது.
Samayam Tamil 500 notes
பணத்தட்டுப்பாடு


நாட்டின் பல்வேறு மாநிலங்களின் ஏடிஎம்களில் திடீரென பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளது.

இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் ரூ.500 நோட்டுக்களை 5 மடங்கு கூடுதலாக அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலர் சுபாஷ் சந்திரா கார்க், அதிக மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுக்களின் பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சில மாநிலங்களில் பொதுமக்களின் பணத் தேவை அதிகரித்துள்ளது. இதற்கு கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலும் ஒரு காரணம் என்று தெரிவித்தார்.

Central Govt plans to print Rs.500 notes in 5 times high.

அடுத்த செய்தி

டிரெண்டிங்