ஆப்நகரம்

அரசு ஊழியர்களுக்கும் வீட்டிலிருந்தே வேலை... அரசின் புதிய திட்டம்!

மத்திய அரசு ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிக்க மத்திய பணியாளர் அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.

Samayam Tamil 15 May 2020, 1:33 am
கொரோனா கொள்ளை நோயை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்நிலையில், ஐடி உள்ளிட்ட பல தொழில்துறைகள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலைசெய்ய அனுமதித்துள்ளன. மே 17ஆம் தேதிக்கு மேல் நான்காம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி ஏற்கெனவே அறிவித்துவிட்டார்.
Samayam Tamil மத்திய அரசு ஊழியர்கள்


பணிச்சூழல் மாறிவருவதை கருத்தில் கொண்டு, அனைத்து மத்திய அரசு ஊழியர்களையும் ஓராண்டுக்கு குறைந்தது 15 நாட்களுக்காவது வீட்டிலிருந்து வேலை செய்ய (work from home) அனுமதிக்க மத்திய பணியாளர் அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இதுகுறித்து பணியாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “வரும் நாட்களில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும் நோக்கில், வருகைப்பதிவு தடுமாற்றத்துடனும், வெவ்வேறு பணி நேரத்துடனும் மத்திய செயலகம் இயங்கும் எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய வழிவகை செய்வதற்காக அனைத்து அமைச்சகங்களிலும், துறைகளிலும் மின்னணு அலுவலகங்களை நடைமுறைப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கான முயற்சியில் 75 அமைச்சகங்கள் ஏற்கெனவே ஈடுபட்டுள்ளன. மின்னணு அலுவலகங்கள் அமைப்பதில் 57 அமைச்சகங்கள் 80 விழுக்காடு பணியை முடித்துவிட்டன.

பாதுகாப்பில் சில சிக்கல்கள் இருப்பதால் முக்கிய ஆவணங்களை இண்டர்நெட் மூலம் பார்க்க முடியாது என உள்துறை அமைச்சகத்தின் விதிமுறைகள் கூறுகின்றன. ஆகவே முக்கிய ஆவணங்கள், கோப்புகளை கையாளும் அதிகாரிகள் வீட்டிலிருந்தே வேலை செய்ய முடியாது என பணியாளர் மற்றும் பயிற்சி துறை தெரிவித்துள்ளது. பணியாளர் அமைச்சகத்தின் முன்மொழிதலுக்கு மற்ற அமைச்சகங்கள் மே 21ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்