ஆப்நகரம்

சுய உதவிக் குழுக்களுக்கு உதவ புதிய திட்டம்!

நகர்ப்புறங்களில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு உதவ புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

Samayam Tamil 14 Aug 2021, 9:34 pm
மத்திய வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் சார்பாக ‘சோன்சிரையா’ என்ற பிராண்டு மற்றும் லோகோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக நகர்ப்புறங்களில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்கள் விற்பனை செய்யப்படும். இதன் வாயிலாக சந்தை வாய்ப்பு அதிகரித்து நகர்ப்புற பெண்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்று மத்திய வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil self help group


மத்திய வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பாக ஏற்கெனவே தீன் தயாள் அந்தோதயா யோஜனா - தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் உள்ள ஏழைப் பெண்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு தொழில் தொடங்கி வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் வாயிலாக நகர்ப்புற பெண்கள் சுய உதவிக் குழுக்களாகப் பிரிந்து தொழில் தொடங்கவும் வருமானம் ஈட்டவும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆதார் கார்டு தொலைஞ்சிருச்சா? புது கார்டு வீடு தேடி வரும்!
இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 60 லட்சம் பெண்கள் அடங்கிய 5.7 லட்சம் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இக்குழுக்கள் கைவினைப் பொருட்கள், ஜவுளி, பொம்மைகள், உணவுப் பொருட்கள் போன்ற பல்வேறு வகையான பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து அதன் வாயிலாக வருமானம் ஈட்டி வருகின்றன. இத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையாக, சுய உதவிக் குழுக்கள் தயாரித்த பொருட்களை அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ள ஆன்லைன் தளங்கள் வாயிலாக விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்