ஆப்நகரம்

ஐசிஐசிஐ வங்கியின் தற்காலிக தலைவராக சந்தீப் பக்ஷி நியமனம்

ஐசிஐசிஐ வங்கி தலைவா் சந்தா கோச்சாா் மீது முறைகேடு புகாா் எழுப்பப்பட்டுள்ளதால் வங்கியின் புதியத் தலைவராக சந்தீப் பக்ஷி நியமனம் செய்யப்பட்டுள்ளா்ா.

Samayam Tamil 19 Jun 2018, 12:02 pm
ஐசிஐசிஐ வங்கி தலைவா் சந்தா கோச்சாா் மீது முறைகேடு புகாா் எழுப்பப்பட்டுள்ளதால் வங்கியின் புதிய தலைவராக சந்தீப் பக்ஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil Chanda Kochar


கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரலில் ஐசிஐசிஐ வங்கி தலைமையிலான 20 வங்கிகள் கூட்டமைப்பு வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.3,250 கோடி கடன் வழங்கியது. வீடியோகான் பெற்ற கடனில் ஏறக்குறைய இன்னும் ரூ.2800 கோடிக்கு மேல் திருப்பிச் செலுத்தப்படாத நிலையில், வழங்கப்பட்ட ரூ.3250 கோடி கடனும் வாராக்கடனாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனைத் தொடா்ந்து வங்கி தலைவா் சந்தா கோச்சாா் மீது விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு விசாரணை நடத்தி முடிக்கும் வரை சந்தா கோச்சாா் தலைவா் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக வங்கி நிா்வாகம் அறிவித்துள்ளது.

அவருக்கு பதிலாக சந்தீப் பாக்ஷி தற்காலிக மற்றும் முழுநேர தலைவராக செயல்படுவாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தீப் பக்ஷி இதற்கு முன்னா் வங்கியின் இயக்குனராக பொறுப்பு வகித்து வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்