ஆப்நகரம்

செல்வ மகள் திட்டம்... இதுல இவ்ளோ நல்ல விஷயம் இருக்கா?

செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் தற்போதைய வட்டி லாபம் மற்றும் பயன்கள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.

Samayam Tamil 25 Apr 2021, 8:43 pm
பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக 'சுகன்யா சம்ரிதி யோஜனா' எனப்படும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை இந்திய தபால் துறை செயல்படுத்தி வருகிறது. பிறந்த குழந்தை முதல் 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ தபால் அலுவலகங்களில் கணக்கு திறக்கலாம். வருமான வரிச் சட்டம் 80 சி-இன் கீழ் வரி விலக்கு கிடைக்கிறது. இத்திட்டத்தின் கீழ், அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்காக இரண்டு கணக்குகளைத் திறக்க முடியும். செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் ஆண்டுக்கு 7.6 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
Samayam Tamil ssy


பெண் குழந்தையின் 21ஆவது வயதில் கணக்கை முடிக்கும் போது மூன்று மடங்கு தொகை கிடைப்பதால் பொதுமக்களிடையே இத்திட்டம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. பெண்ணுக்கு 24 வயது ஆகும் போதோ அல்லது திருமணத்தின் போதோ கணக்கிலுள்ள மொத்தத் தொகையை எடுத்துவிட்டு கணக்கை மூடி விடலாம். செல்வ மகள் சேமிப்புக் கணக்கை துவக்கும் போது முதல் கட்டமாக ரூ.250 செலுத்தினால் போதுமானது. செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் பெண் குழந்தைக்கு கணக்கு தொடங்குவதற்கு அவர்களின் பிறப்புச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். பிறப்புச் சான்றிதழ் இல்லாத நிலையில், ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் பாஸ்போர்ட் போன்றவற்றை வயதுச் சான்று ஆவணமாக வழங்கலாம்.

இந்தத் திட்டத்தை தொடங்க அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம். பெற்றோரின் ஆதார் அட்டை மற்றும் குழந்தையின் ஆதார் அட்டை அல்லது பிறப்புச் சான்றிதழ் நகலைக் காண்பித்து கணக்கை எளிதாகத் தொடங்க முடியும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்