ஆப்நகரம்

ரூ.2,000 பணம் வந்திருச்சா? வரலனா உடனே இதைப் பண்ணுங்க!!

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் எட்டாவது தவணைப் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது.

Samayam Tamil 19 Apr 2021, 11:08 am
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ.6,000 நிதியுதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது. இத்திட்டத்துக்கான எட்டாவது தவணைப் பணம் தற்போது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. ஏப்ரல் - மே மாதங்களில் இந்த நிதி வந்துசேரும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டிருந்தது. பலருக்கு இன்னும் பணம் வரவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அவர்களுக்கு பணம் வந்துவிட்டதா இல்லையா என்பதை முதலில் பார்க்க வேண்டும்.
Samayam Tamil pm kisan


இத்திட்டத்தில் நிதியுதவி பெறுவதற்கு பயனாளியின் பெயர் இணைக்கப்பட்டுள்ளதா என்று தெரிந்துகொள்வதற்கு pmkisan.gov.in இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.

மெனு பாரில் உள்ள ’farmers corner’ என்ற வசதியை கிளிக் செய்து அதில் 'beneficiary list' என்பதில் உள்நுழைய வேண்டும்.

உங்களது மாநிலம், மாவட்டம், பிரிவு, கிராமத்தின் பெயர் போன்ற விவரங்களைப் பதிவிட வேண்டும்.

பின்னர் 'Get information' என்பதை கிளிக் செய்து பார்த்தால் இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளின் பெயர் விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் தகுதியுள்ளவர்களுக்குப் பணம் வந்துசேரவில்லை என்றால் அரசின் ஹெல்ப் லைன் எண்களுக்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம். அதேபோல, மின்னஞ்சல் மூலமாகவும் புகார் செய்யலாம்.

பிஎம் கிசான் டோல் ஃப்ரீ நம்பர்: 18001155266,

பிஎம் கிசான் ஹெல்ப் லைன் நம்பர்: 155261,

பிஎம் கிசான் லேண்ட் லைன் நம்பர்: 011-23381092, 23382401,

பிஎம் கிசான் புதிய உதவி எண்: 011-24300606,

பிஎம் கிசான் ஹெல்ப் லைன்: 0120-6025109,

மின்னஞ்சல் முகவரி: pmkisan-ict@gov.in

அடுத்த செய்தி

டிரெண்டிங்