ஆப்நகரம்

Chennai Ford: உற்பத்தி மேலும் நீட்டிப்பு.. சென்னை ஃபோர்டு ஆலை முடிவு!

சென்னை மறைமலை நகர் ஃபோர்டு ஆலையில் ஜூலை இறுதி வரை உற்பத்தி நீட்டிப்பு.

Samayam Tamil 26 Jun 2022, 3:40 pm
சென்னை அருகே உள்ள ஃபோர்டு (Ford) நிறுவனத்தின் ஆலையில் உற்பத்தி ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil chennai ford


அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனத்தின் ஆலை சென்னை அருகே மறைமலை நகரில் இயங்கி வருகிறது. ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக கடந்த ஆண்டு அறிவித்தது. இதையடுத்து, ஊழியர்களுக்கு இழப்பீட்டுத் தொகையும் அறிவித்தது.

எனினும், தங்களுக்கு போதிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என மே 30ஆம் தேதி முதல் ஃபோர்டு ஆலை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதனால் ஆலையில் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இந்திய குடும்பங்களின் பாதி பணம் இதில்தான் இருக்கிறது.. யாரும் எதிர்பார்க்காத சர்பிரைஸ்!
பின்னர், போராட்டம் செய்த ஊழியர்களில் ஒரு பிரிவினர் மட்டும் வேலைக்கு திரும்பியதால் ஜூன் 14ஆம் தேதி முதல் டபுள் ஷிஃப்ட் முறையில் மீண்டும் சென்னை ஃபோர்டு ஆலையில் கார் உற்பத்தி தொடங்கியது. மேலும், ஜூலை இறுதி வரை உற்பத்தியை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஃபோர்டு நிறுவனம், “ஏராளமான ஊழியர்கள் உற்பத்திக்கு ஆதரவு அளித்துள்ளனர். அவர்களுடன் இழப்பீட்டு தொகை தொடர்பாக பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. 50% மேற்பட்ட ஊழியர்கள் உற்பத்திக்கு ஆதரவளித்துள்ளனர்.

ஆதரவளிக்கும் ஊழியர்களுக்கு ஊதிய பாதுகாப்பு கிடைக்கும். ஊழியர்கள் மற்றும் ஊழியர் சங்க பிரதிநிதிகளுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம். ஜூலை இறுதி வரை உற்பத்தியை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்